Wednesday, 17 October 2012

விஜய் படத்தில் ஹீரோவாகும் போனிகபூரின் மகன்!

விஜய் படத்தில் ஹீரோவாகும் போனிகபூரின் மகன்!\      விஜய் நடித்து தமிழில் மெகாஹிட்டான ’கில்லி’ படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் விஜய் நடித்த ஹீரோ கேரக்டரில் போனிகபூரின் மகன் அர்ஜீன் கபூர் ஹீரோவாக நடிக்கிறார்.
தெலுங்கில் ’ஒக்கடு’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்ட படம் தமிழில் ’கில்லி’ என்ற பெயரில் ரீமேக் ஆகி இங்கேயும் வசூலில் சக்கை போடு போட்டு மெகாஹிட் படமானது.
விஜய், த்ரிஷா. காம்பினேஷனில் பட்டையை கிளப்பின இந்தப் படம் இப்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.
 ஹிந்தியில் நடிகரும் தயாரிப்பாளருமான போனிகபூரின் மகன் அர்ஜூன் கபூர் ஹீரோவாக நடிக்கிறார்.
ரீமேக் செய்வதற்கான பெர்மிசனை வாங்கி விட்ட போனிகபூர் இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ப்ளான் பண்ணியிருக்கிறாராம்.
’2 ஸ்டேட்ஸ்’ உட்பட மூன்று ஹிந்திப் படங்களில் அர்ஜூன்கபூர் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இந்தப் படத்தை அடுத்த வருஷன் ஜூன் மாதன் ஆரம்பிக்க இருப்பதாக போனி கூறியிருக்கிறார்.
இந்தப் படத்தின் டைட்டில், ஹீரோயின் மற்றும் படத்தை டைரக்ட் செய்யும் டைரக்டர் யார்? யார்? என்ற பல முக்கியமான விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை.

அடேங்கப்பா..? : ’துப்பாக்கி’ தெலுங்கு ரைட்ஸ் 15 கோடி!!!

அடேங்கப்பா..? : ’துப்பாக்கி’ தெலுங்கு ரைட்ஸ் 15 கோடி!!!
     கோலிவுட்டின் டாப் ஹீரோக்களின் காட்டில் எப்போதுமே அடைமழைதான்; பணமழை. அவர்கள் நடித்த படங்களின் ரிசல்ட் பாஸா பெயிலோ ஆனால் அடுத்தடுத்த படங்களின் பிஸினெஸ் வால்யூ மட்டும் கூடிக்கொண்டே செல்கிறது.
அவர்கள் பிரபல டைரக்டர்களுடன் சேர்ந்து விட்டால் அந்த படத்தின் பிஸினஸ் எல்லா சைடிலும் கோடிகளை அள்ளும். அப்படித்தான் விஜய் நடித்த ’துப்பாக்கி’ படத்தின் தெலுங்கு ரைட்ஸ் சுமார் 15 கோடி ரூபாய் என்ற அளவில் விலை போயிருக்கிறதாம்.
ஏ.ஆர்.முருகதாஸ்,விஜய்,காஜல் அகர்வால் என பெரிய காம்பினேஷனில் ரெடியாகி வரும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். விஜய்க்கு முந்தைய படமான ஷங்கரின் ’நண்பன்’ படம் மெகாஹிட் படமாக அமைந்தது. அதேபோல ஏ.ஆர்.முருகதாஸூம் ஹிந்தியில் போய் ’கஜினி’ படத்தை ஹிட்டாக்கி விட்டு வந்தார். அவரை நம்பி படம் எடுக்க பணத்தை கோடிகளில் கொட்டி கொடுக்க பல ஃபாரீன் தயாரிப்பி நிறுவனங்களே இப்போது க்யூவில் நிற்கிறது.
இந்த இருவரும் சேர்ந்திருக்கும் படம் ’துப்பாக்கி’ என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தப் படத்தை தெலுங்கு ரைட்ஸுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு இப்போது தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ஷோபாராணி இந்தப் படத்தை சுமார் 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.
கடந்த சில வருடங்களால் தமிழில் மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்கள் எல்லாமே தெலுங்கில் ரீமேக்காகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது, அதனால் தான் தமிழ்ப்படங்களின் தெலுங்கு ரைட்ஸுக்கு பெரிய அளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
வரும் தீபாவளியன்று ’துப்பாக்கி’ ரிலீஸ் ஆகிறது.

அட இங்கப் பார்றா.. : இனிமே அமலாபாலுக்கு அப்பா தான் மேனேஜராம்..!?

அட இங்கப் பார்றா.. : இனிமே அமலாபாலுக்கு அப்பா தான் மேனேஜராம்..!?
    கைவசம் ‘நிமிர்ந்து நில்’ என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் வைத்துக்கொண்டு மார்க்கெட் ரீதியாக டம்மியாகக் கிடக்கும் நடிகை அமலாபால், போனவாரம் எட்டாவது முறையாக தனது கால்ஷீட் மேனேஜரை மாற்றி உலக சாதனை படைத்திருக்கிறார்.
தங்களது மார்க்கெட் எப்போதெல்லாம் டவுன் ஆகிறதோ அப்போதெல்லாம் நடிகைகள் உடைகளுக்கு அடுத்த படியாக மாற்றுவது மேனேஜர்களைத் தான்.
அந்த வரிசையில் ‘விகடகவி’ என்ற ஸ்மால் பட்ஜெட் படத்தில் படத்தில், தனது கேரள மேனேஜர் தயவில் முப்பதாயிரம் ரூபாய் சொச்சம் சம்பளத்தில் அறிமுகமான அமலாபால், அந்தப் படத்தின் ஷூட்டிங் முடியும் முன்பாகவே தனது முதல் மேனேஜரை மாற்றி தனது முதல் சாதனைக் கணக்கை துவங்கினார்.
அந்தக் கணக்கு இப்போது நீண்டு, நடிக்க வந்த இரண்டே வருடங்களில் இப்போது எட்டாவதாக தனது மேனேஜரை மாற்றியிருக்கிறார் அமலாபால்.
ஆமாம், இனிமேல் அமலாபாலின் அப்பா தான் அவருடைய கால்ஷீட் மேனேஜர். இனியும் மேனேஜரை வைத்து அடிக்கடி நீக்கினால் பேர் டேமேஜ் ஆகிவிடும் என்று நினைத்தாரோ..? என்னவோ..? அவரது அப்பாவுக்கே மேனேஜர் ட்ரெயினிங் கொடுத்து வருகிறாராம் அமலா.
அது இருக்கட்டும்.. மேனேஜர்  வேலையில இருக்கிற டென்சனையும் மத்த சகலவிதமான பிரசரையும் சமாளிச்சு பார்க்க அப்பாவால முடியுமா அமலா? முடிஞ்சா சரிதான்.

போலி சான்றிதழ் புகாரில் பலே மாமனார் : போலீசில் சிக்குகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்?

போலி சான்றிதழ் புகாரில் பலே மாமனார் : போலீசில் சிக்குகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்?
      நடிகர் ஸ்ரீகாந்த் மாமனாரான சாரங்கபாணியின் கல்லூரியில் வழங்கப்படும் சான்றிதழ் போலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் உட்பட 5 பேர்கள் எந்த நேரமும் போலீசாரால் கைது செய்யப்படலாம்.
நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா. பெரிய போராட்டமெல்லாம் செய்து ஸ்ரீகாந்த் வீட்டு வாசலில் டேரா போட்டு உண்ணாவிரதமெல்லாம் இருந்து அவரைக் கரம் பிடித்தார். அவரது அப்பாவான சாரங்கபாணிக்கு ஊட்டியில் சொந்தமாக ஒரு கல்லூரி உள்ளது. ஊட்டி உசிலமேடு செல்லும் வழியில் உள்ள இந்த கல்லூரியில் உணவு மற்றும் ஓட்டல் நிர்வாகம் குறித்த படிப்புகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்தக் கல்லூரியில் பல ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த கல்லூரியில் பொறியியல் வகுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதிலும் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து படித்தனர். கல்லூரியில் படித்து முடித்தபின் வழங்கப்பட்ட சான்றிதழ் அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையை சேர்ந்த பிரித்விராஜ், பழனியை சேர்ந்த விக்னேஷ்குமார், ராஜ்குமார், புதுச்சேரியை சேர்ந்த சாகுல் அமீது, பொள்ளாச்சியை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகிய மாணவர்கள் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனுவை அனுப்பியிருக்கிறார்களாம்.

அந்த புகாரில்.., நான் கடந்த 2006-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். இந்த கல்லூரி மூலம் நடத்தப்படும் என்ஜினீயரிங் படிப்புக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு ரூ.5 லட்சம் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதை நம்பி நான் இந்த தொகையை செலுத்தி படித்தேன். படிப்பு முடிந்ததும் அதற்கான சான்றிதழை எனக்கு தபால் மூலம் கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்தது. அந்த சான்றிதழை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சரி பார்த்த போது அந்த படிப்பிற்கு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் அளிக்கவில்லை என்று தெரிவித்து விட்டனர்.

இதனால் நான் வேலையில் சேர முடியவில்லை. எனது படிப்பு வீணாகிவிட்டது. எனவே எனக்கு போலி சான்றிதழ் வழங்கிய கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கல்லூரியை நடத்தி வரும் சென்னையை சேர்ந்த சாரங்கபாணி, அவருடைய மனைவி சாலினி, மகள் வந்தனா, மருமகன் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஊட்டி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, மாமியார் சாலினி, கல்லூரி மேலாளர் அரோஸ்குமார் உள்ளிட்டோர் மீது ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனசாட்சி இல்லாமல் 17 கோடியை வீணாக்கிய லாரன்ஸ்! புரொட்யூசர் புகார்

மனசாட்சி இல்லாமல் 17 கோடியை வீணாக்கிய லாரன்ஸ்! புரொட்யூசர் புகார்
    ராகவா லாரன்ஸ் டைரக்‌ஷனில் லேட்டஸ்ட்டாக தெலுங்கில் ரிலீஸான படம் ‘ரிபெல்’. அங்கு பிரபல ஹீரோவாக இருக்கும் பிரபாஸூம், தமன்னாவும் நடித்திருக்கும் இப்படத்தில் படத்தைக்காட்டிலும் படத்தில் தமன்னா தொப்புள் கவர்ச்சி ரொம்பவும் பாப்புலராகி வருகிறது.
ஆனா இந்த 17 கோடி பிரச்சினைக்கு அது காரணமில்லை. ’காஞ்சனா’ படம் தெலுங்கில் ஓடினாலும் ஓடியது ராகவா லாரன்ஸ் அங்குள்ள தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கும் டார்ச்சர்கள் கொஞ்சம் ஓவராகத்தான் போய்க் கொண்டிருக்கிறதாம்.
ஆனால் அவர்களும் எவ்வளவு தான் பொறுப்பார்கள். அதனால் தான் ராகவா லாரன்ஸ் மீது அங்குள்ள புரொடியூசர் கவுன்சிலில் இரண்டு தயாரிப்பாளர்கள் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கிறார்கள்..
ராகவா லாரன்ஸ் டைரக்‌ஷனில் ’ரிபெல்’ படத்தை தயாரித்த ஜே. பகவான் மற்றும் புல்லா ராவ் ஆகியோர் தான் ராகவா லாரன்ஸ் மீது தெலுங்கு புரொடியூசர் கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
ரிபெல் படத்தை ஃப்ர்ஸ்ட் காப்பி அடிப்படையில் 22.5 கோடிக்குள் முடித்துத் தருவதாக ராகவா லாரன்ஸ் கூறினார். ஆனால், படத்திற்கு தேவையே இல்லாத செலவுகளால் படத்தை 40 கோடி வரை செலவு செய்து இழுத்து விட்டார் என்பது தான் லாரன்ஸ் மீது அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு.
ஏற்கனவே சூட்டிங் சமயத்தில் படத்தின் நாயகன் பிரபாஸுக்கும் லாரன்சுக்கும் முட்டிக்கொண்டது. சூட்டிங்கை ஜவ்வாய் இழுக்கிறார் என டென்சனாய் விட்டாராம் பிரபாஸ்.
லாரன்ஸ் மட்டும் சும்மா இருப்பாரா..? பதிலுக்கு அவரும் அங்குள்ள டைரக்டர் யூனியனில் ’ரிபெல்’ படத்தின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமையை எனக்குச் சொல்லாமலேயே விற்று விட்டார்கள் எனவும், டப்பிங் உரிமையை தனக்குத் தருவதாக சொல்லியிருந்தார்கள் எனவும் படத்தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
என்னா... பாஸூ 22 கோடி எங்க இருக்கு? 40 கோடி எங்க இருக்கு..? கொஞ்சமாவது மனசாட்சி வேணாமா..? லாரன்ஸ் என அந்த ஊர் புரொட்யூசர் கௌன்சிலில் குரல் ஒலிக்கத்துவங்கிவிட்டதாம்.

நான் ஈ - ஒரு அப்பட்டமான காப்பி? அடச்சே..

 நான் ஈ - ஒரு அப்பட்டமான காப்பி? அடச்சே..

           இந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களில்(ஏன் மொத்த இந்தியப்படங்களில்) மிகப்பெரிய வெற்றியையும், பாராட்டுக்களையும் ஒரு சேரப் பெற்ற படம் நான் ஈ.
 ஒரு சாதாரண ஈ யை ஹீரோவாக்கி, அதில் ஒரு அழகான காதல்கதையை கலந்து, அட்டகாசமாய் திரைக்கதையமைத்து.. டைரக்டர்னா அது இவர்தான்யா.. மனுசன் கன்டினுயஸா கலக்கிட்டு இருக்காரே.... நிறைய பேர் ஹாலிவுட் மாதிரி படம்னு பேசிகிட்டு டிவிடியை காப்பியடிச்சுட்டு இருக்கப்ப நேரா அங்கயே போய் ரிலீஸாகுற லெவல்ல ஒரு படத்தைப் பண்ணிட்டாரே என தமிழ்,தெலுங்கு, இந்தி என டோட்டலாய் இந்திய திரையுலகமும், ரசிகர்களும் ஒன்று கூடி வியந்து வியந்து பாராட்டிய படம். 
நம்மாளுங்களும் ஹாலிவுட் லெவல்ல போயாச்சு என நாம் காலரைத் தூக்குவிட்டுக்கோண்டிருக்கும் போது நம்மளை பாத்து போங்கடா கேணப்பயலுகளா என பல்லிளிக்கும் செய்தி ஒன்று வந்திருக்கிறது.  
காக்ரோச் (கரப்பான்பூச்சி) என்கிற திரைப்படம். லூக் ஈவ் என்பவர் டைரக்ட் செய்து, 2010ல் ஆஸ்திரேயாவில் வெளியாகி ஏகப்பட்ட திரைப்பட விழாக்களில் அவார்டுகளை வாங்கிய படம்.  
இணையத்திலும் இந்தப் படம் முழுமையாக காணக்கிடைக்கிறது.
அதன் ஆங்கில கதைச்சுருக்கம்
 
"Cockroach is a black, romantic comedy. When Charlie is run over by his own wedding car, he is given another chance at life. Reincarnated as a cockroach he does everything in his power to convince his grieving widow that he has returned. He must woo her back or risk losing her forever!"
 
நீங்களுமா ராஜமௌலி காரு?
 
ஈக்கும் கரப்பான் பூச்சிக்கும் எத்தனை வித்தியாசம்னு பார்க்க விருப்புவர்கள் இங்கே Click செய்யவும். 

நோ சான்ஸ் : மும்பைக்கு மூட்டை முடிச்சுகளை கட்டினார் சிம்ரன்

நோ சான்ஸ் : மும்பைக்கு மூட்டை முடிச்சுகளை கட்டினார் சிம்ரன்
      தமிழில் ‘நேருக்கு நேர்’ படம் மூலம் பிரபலமான சிம்ரன் ‘நட்புக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘ரமணா‘, ‘பிதாமகன்’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார். 2003-ல் தீபக் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அதீப், அதித் என இரு மகன்கள் உள்ளனர்.
சிம்ரன் சினிமாவில் பாப்புலரான நடிகையாக இருந்தபோது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இடம் வாங்கி போட்டார். தற்போது அங்கு தான் பங்களா வீடு கட்டி குடியேறியுள்ளார்.
திருமணத்துக்குப் பின்பு சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவு செய்து வாய்ப்புகளுக்காக காத்து இருந்தார். ஆனால் அவருக்கு படவாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக சுந்தர்.சியுடன் ‘ஐந்தாம் படை’ படத்தில் நடித்தார். கதாநாயகிக்கு இணையான கேரக்டரில் நடிக்க தயார் என்று கூறி கேரக்டருக்காக காத்து இருந்தார். ஆனால் யாரும் அழைக்கவில்லை.
அதனால் சின்னத்திரையில் சில சீரியல்களிலும், சில டிவி ஷோக்களிலும் தலை காட்டினார். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் சின்னத்திரையை நம்பி காலத்தை ஓட்ட முடியும் என்று யோசித்தவர் படங்கள் இல்லாததால் கடந்த சில வாரங்களாக விரக்தியடைந்த நிலையில் இருந்த அவர் சென்னையில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு மும்பையில் குடியேற முடிவு செய்து உள்ளார்.
மும்பையில் உள்ள நாசிக் நெடுஞ்சாலையில் சிம்ரனுக்கு ‘ரிஷிபார்ம்ஸ்’ என்ற பெயரில் 70 ஏக்கர் நிலம் உள்ளது. அங்குபோய் தனது கணவருடன் செட்டிலாகும் முடிவில் இருக்கிறாராம் சிம்ரன்.

கட் பண்ணினார் கல்பாத்தி, கோபப்பட்டார் கே.வி.ஆனந்த்; மாற்றானுக்கு வந்த சோதனை!

கட் பண்ணினார் கல்பாத்தி, கோபப்பட்டார் கே.வி.ஆனந்த்;  மாற்றானுக்கு வந்த சோதனை! ’அயன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கே.வி.ஆனந்த், சூர்யா காம்பினேஷனில் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்புடன் போன வெள்ளியன்று ரிலீஸ் ஆன ’மாற்றான்’ படம் ரசிகர்கள் மற்றும் பல தரப்பிலிருந்து விதவிதமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
அதில் முக்கியமானது படத்தின் நீளம் தான். கிட்டத்தட்ட ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் படத்தின் நீளம் தான் ஒரு பெரும் குறையாக சொல்லப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஜெட் வேகத்தில் செல்லும் படத்தின் முதல்பாகத்தைப் போல இல்லாமல், பால் பவுடருக்கு விளம்பரப்படம் எடுத்ததைப் போல இருக்கறதாம் படத்தில் இரண்டாம் பாகம். இதனால் எரிச்சலின் உச்சத்துக்கே போகும் ரசிகர்கள் தியேட்டரில் ஓவென்று கத்திக் கொண்டு கண்டபடி கமெண்ட் அடிக்கிறார்களாம்.
இதனால் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கும் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர்களும் தியேட்டர் ஓனர்களும் படத்தின் நீளத்தை குறைத்துத் தருமாறு படத்தின் டைரக்டர் கே.வி.ஆனந்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் கே.வி.ஆனந்த் ”கட்டா அதுமட்டும் முடியவே முடியாது” என்று சொல்லி விட்டாராம்.
”படத்தின் நீளத்தை குறைக்கவில்லை என்றால் படத்தை தொடர்ந்து ஓட்டுவது ரொம்ப கஷ்டம்” என்று தியேட்டர் ஓனர்கள் எச்சரிக்கவே வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமே படத்தின் எடிட்டரை கூப்பிட்டு தேவையற்ற 21 நிமிட சீன்களை கட் பண்ணிவிட்டாராம்.
இதனால் கே.வி. ஆனந்த் டென்சனில் இருக்கிறாராம்.

Sunday, 14 October 2012

தமிழ் தெரியாததால் நடிக்க மறுத்த ஷபானா ஆஸ்மி

தமிழ் தெரியாததால் நடிக்க மறுத்த ஷபானா ஆஸ்மி \
       ’தென் மேற்கு பருவக்காற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி டைரக்ட் செய்து வரும் புதிய படம் ‘நீர்ப்பறவை’.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வரும் இந்த படத்தில் ’வெண்ணிலா கபடி குழு’ விஷ்ணு ஹீரோவாகவும், சுனேனா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், நந்திதா தஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இதில் நந்திதா தாஸ் நடித்த கேரக்டரில் முதலில் ஷபானா ஆஸ்மியைத்தான் டைரக்டர் சீனு ராமசாமி நடிக்க வைக்க முடிவு செய்திருந்தாராம். அதன்படி அவரைத் தொடர்பு கொண்டு நடிக்க கேட்ட போது எனக்கு தெரியாத மொழிப்படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டாராம்.
எனக்கு ஹிந்தியும் ஆங்கிலம் மட்டும் தான் தெரியும். மொழி தெரியாத படங்களில் நான் எப்போதுமே நடிப்பதில்லை. அதனால் நீங்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம். வேறு யாராவது நல்ல நடிகையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டாராம் ஷபானா ஆஸ்மி.
எந்த மொழியாக இருந்தாலும் சரி, ப்ராம்டிங் என்ற பெயரில் abcd efgh  என உதட்டசைத்து விட்டு காசை வாங்கிக்கொண்டு போகும் இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு நடிகை என ஷபானாவின் மன உறுதியை நினைத்து மெய் சிலிர்த்தாராம் சீனு ராமசாமி.

மூன்று மொழிகளில் படம் தயாரிக்கும் மைக் மோகன்

மூன்று மொழிகளில் படம் தயாரிக்கும் மைக் மோகன்
     தமிழ் திரைப்பட வரலாற்றில் இன்னும் உடைக்கமுடியாத சில வெள்ளிவிழா ரெகார்டுகளை தன் பெயரில் வைத்திருக்கும் 'மைக்' மோகன் மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.
ரொம்ப காலங்கள் ஒதுங்கியிருந்த மோகன் சில வருடங்களுக்கு முன் சுட்ட பழம் என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாய் வந்தார். ஆனால் அந்தப் படம் சம்பந்தப் பட்ட எல்லார் கையையுமே சுட்டுவிட, மீண்டும் கன்னடப் பக்கமாய் டிவி சீரியல்களை சுட்டுத்தள்ள ஆரம்பித்தார்.
 இடையிடையே மலையாளப் படங்களிலும் அவர் கால்பதித்துக்கொண்டிருப்பார். அவரது இந்த விடா முயற்சிகள் உண்மையிலே பாராட்டுக்குறியவை தான்.
அப்படித்தான் இப்போது அடுத்த முயற்சியாய் மலையாளத்தில் சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற காமெடிப்படமான 'பியூட்டிபுல்'லை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மீதமிருக்கும் மூன்று தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப் போகிறார். அதுவும் ஒவ்வொரு மொழிக்கும் வேறு வேறு இயக்குநர்கள், நடிகர்கள் இருப்பார்களாம்..

Saturday, 13 October 2012

துப்பாக்கி சூட்டிங் ஸ்பாட் கேலரி

thuppakki-movie-working-stills-kollybuzz-17

மூட நம்பிக்கையினால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றிய படம்?

மூட நம்பிக்கையினால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றிய படம்?

பெரும் பணக்காரர்கள் தங்களிடமுள்ள பணத்தை பாதுகாத்துக் கொள்ளவும், எலெக்‌ஷனில் தோற்றுப்போன ஒரு அரசியல்வாதி மீண்டும்
பதவிக்கு வர நடக்கும் போட்டியில் ஒரு இளம் காதல் ஜோடி எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லும் படமாக ரெடியாகி வருகிறது 'மாடபுரம்'.
சிவக்குமார், ஷில்பா, பார்வதிசுரேஷ், முத்துக்குமார்  என புதுமுக பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் பிரவின்.
இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மூட நம்பிக்கைகளால் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற சமூக விழிப்புணர்வையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.

நிகில் ஒரு நிழல் மாதிரி பெட்ரூமுக்குள்ள கூட இருப்பாரோன்னு பயமா இருக்கு

நிகில் ஒரு நிழல் மாதிரி பெட்ரூமுக்குள்ள கூட இருப்பாரோன்னு பயமா இருக்கு

நீர்ப்பறவை ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி அந்த படத்தில் தான் சந்தித்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அப்படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகனைப் பற்றி பேச்சு வர.. ‘இவர் ஒரு நிழல் மாதிரிங்க.. எங்க போனாலும் எப்படியாச்சும் அங்க வந்துடுறாரு. இவருக்கு தெரியாம இன்டஸ்ட்ரில எதுவுமே நடக்குறதில்லை. எனக்கு சமயத்துல நம்ம பெட்ரூமுகுள்ளயும் இவர் இருப்பாரோன்னு பக்குன்னு தோனும்.’ எனப்பேச அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.
அதாவது அந்த அளவுக்கு இன்டஸ்ட்ரிக்குள்ள எல்லா வட்டத்திலும் தொடர்புடையவர். சொல்ல வேண்டிய விசயங்களை ஈமெயில், யூடியூப், டிவிட்டர் என பல வழிகளில் மக்களிடம் உடனடியாய் கொண்டுபோய் சேர்த்துவிடுவதில் கில்லாடி என ஜாலியாய் பாராட்டி பேசினார்.  

நிகில் யாரென்று தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன க்ளூ. எந்த சினிமா விழா போட்டோ கேலரியைப் பார்த்தாலும் ஒருவர் கிட்டதட்ட எல்லா போட்டோகளிலும் ஒரு புன்னகையுடன் இருப்பார். அவர்தான் நிகில் முருகன்.

சென்னையில் ட்ராபிக் ப்ராப்ளம் - என்ன செய்வார் சரத்குமார்?

சென்னையில் ட்ராபிக் ப்ராப்ளம் - என்ன செய்வார் சரத்குமார்?

சென்னையின் முக்கிய அடையாளமாக மாறிப்போன ட்ராஃபிக்கை பற்றிப் பேசும் ஒரு படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடிக்கிறார். மலையாளத்தின் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிய ’ட்ராபிக்’ படம் தமிழில் ’சென்னையில் ஒருநாள்’ என்ற டைட்டிலுடன் ரிலீஸ் ஆகிறது.
மனித வாழ்க்கையின் வெவ்வேறு சூழல்களில்...வெவ்வெறு விதியின் பிடியில் சிக்கியிருக்கும் மனிதர்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து இணைப்பதுதான் சென்னையில் ஒரு நாளின் குறிக்கோள் !
'அன்போ, வெறுப்போ, ஆசையோ, கோபமோ, துரோகமோ, துயரமோ எந்த உணர்வாயினும் முக்கியமான தருணங்களில் வெளிப்படும் நுணுக்கமான மனித உணர்வுகள் வாழ்வில் பல அதிரடியான திருப்பங்களை ஏற்படுத்தி விடும். அதுபோல, துயரத்தின் விளிம்பில் இருக்கும் ஒருவர் எடுக்கும் முடிவு, இன்னொருவருக்கு வரமான வாழ்க்கையாக மாறும் அதிசயத்தை இந்த படம் உரக்கப் பேசப் போகிறதாம்.
இதன் மூலம் ’உடல் உறுப்பு தானம்’ எனும் உயர்வான விஷயம் பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் பரவப் போவது ஒரு போனஸ் !' என்கிறார் படத்தை 'ஐ' பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கும் ராதிகாசரத்குமார். இப்படத்தினை அவருடன் இணைந்து தயாரிப்பவர், மலையாள ’ட்ராபிக்’ படத்தை தயாரித்த லிஸ்டின்.
"விறுவிறுப்பாய் நகரும் திரைக்கதையில், சென்னை நகரின் பரபரப்பான டிராஃபிக்கும் ஒரு கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறதாம். ஒரு உயிரைக் காப்பாற்றும் மனசு இந்த ஜன சந்தடியில் இருக்குமா...? ரோட்டில் ஏற்படும் பல்வேறு தடைகளைத் கடந்து ஒரு உயிர் பிழைக்குமா..? என கடைசி நொடி வரை படம் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும்.
இப்படியொரு உயிரோட்டமான கதையை தமிழர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். அந்த நம்பிக்கையோடுதான் களம் இறங்கியிருக்கிறோம்!" என்கிறார் லிஸ்டின்.
சென்னையின் முக்கிய பிரச்சனையான ’ட்ராபிக்’கைப் பற்றி பேசும் இந்தப் படத்தில், டைரக்டர் ஷகித்காதர் ஏதாவது தீர்வு சொல்லியிருக்கிறாரா..?
படம் ரிலீஸ் ஆனால் தெரிந்து விடும்.

தலைகீழாக தொங்கிய தல

தலைகீழாக தொங்கிய தல : அஜித்தின் 12 மணி நேர நான் - ஸ்டாப் ஆக்‌ஷன்
           இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இப்போதும் கிட்டத்தட்ட ஒரு புதிய நடிகர் எப்படியெல்லாம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள புதிய புதிய முயற்சிகளை எடுப்பாரோ... அதற்கு இணையாக நடிப்புக்காக மெனக்கிடுகிறார் ’தல’ அஜீத்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஎம் ரத்னம் தயாரித்து வரும் படத்துக்காக முதல்நாள் மாலை 8 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை நான் ஸ்டாப்பாக ஒரு சண்டைக் காட்சியில் நடித்து அனைவரையும் அசத்தியுள்ளாராம் அஜித்.
அதுவும் சாதாரணமான சண்டைக்காட்சியல்ல... தலைகீழாக தொங்கியபடி போட வேண்டிய சண்டை அது. கரணம் தப்பினால் மரணம்... ஏற்கனவே ஏகப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்துள்ள அஜீத்துக்கு இந்த ரிஸ்க் வேண்டாம் என இயக்குநர் விஷ்ணுவர்தன் எவ்வளவோ கூறியும், 'டூப் வேண்டவே வேண்டாம்... நானே பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி தலைகீழாகத் தொங்கியுள்ளார்.
நடு நடுவே சின்ன கேப் விட்டதோடு சரியாம். இரவு முழுக்க தூங்காமல் இந்த சண்டைக் காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார்.
தான் நடித்த காட்சிகளை காலையில் போட்டுப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்ட அஜீத்... "கஷ்டப்பட்டாதான் இந்த சந்தோஷம் கிடைக்கும்," என்றாராம்!

Friday, 12 October 2012

எல்லாமே... தப்பா இருக்குது? சுனேனா கடுப்பு


எல்லாமே... தப்பா இருக்குது? சுனேனா கடுப்பு 
 மிழில் 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனேனா. முதல் படம் பாடல்களுக்காக ஹிட்டானாலும் தொடர்ந்து அவர் தமிழில் நடித்த 'வம்சம்' உட்பட எந்த படங்களும் பெரிதாக ஓடவில்லை.
பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது அவர் புதுமுகங்கள் ஜோடியாக பல படங்களில் நடித்து வருகிறார். 
சுனைனா லேட்டஸ்ட்டாக நடித்த ‘பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம்’ படத்தில் கூட அவருக்கு ஜோடியாக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பெப்சி விஜயன் மகன் சபரீஷ் என்ற புதுமுகம் தான் ஹீரோவாக நடித்தார்.
சுனேன இப்போது சீனுராமசாமி இயக்கும் ‘நீர்பறவை’ படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கும் ‘நதிகள் நனைவதில்லை’ படத்திலும் இன்னொரு ஸ்டண்ட் மாஸ்டரான ஜாகுவார் தங்கத்தின் மகன் ஜெய்ஜித் ஜோடியாக நடிக்கிறார்.  இப்படி புதுமுக ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதை மீடியாக்கள் பட வாய்ப்புகள் இல்லாததால் சுனேனா இப்படி புதுமுக ஹீரோக்களுடன் ஜோடி சேர்கிறார் என எழுதி வருகின்றன.
இதனால் கடுப்பில் இருக்கும் அவர் ஒரு காலத்தில் புதுமுகங்களாக வந்தவர்கள் தான் இப்போது பிஸியான ஹீரோக்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது என்னை மட்டும் புதுமுகங்களுடன் நடிக்கும் நடிகை என்று எழுதுவது சரியில்லை. எதுவாக இருந்தாலும் என்னிடம் ஒருவார்த்தை கேட்டுவிட்டு எழுதுங்கள் என்று புலம்பியிருக்கிறார்.

பல்டியடித்தார் டைரக்டர்! சுஜிபாலாவை திருமணம் செய்ய மாட்டேன்?

பல்டியடித்தார் டைரக்டர்! சுஜிபாலாவை திருமணம் செய்ய மாட்டேன்?
              ’ய்யாவழி’ ‘முத்துக்கு முத்தாக’ உள்பட சில படங்களில் நடித்த சுஜிபாலா தற்போது‘உண்மை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பி. ரவிக்குமார் இயக்கி நடித்து வருகிறார்.
இந்தப் படப்பிடிப்பில் சுஜிபாலாவுக்கும், படத்தின் டைரக்டர் ரவிக்குமாருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இருவீட்டாரின் பெற்றோர் சம்மதத்துடன் சுஜிபாலாவின் சொந்த ஊரான நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் கூட நடந்தது. 
பிறகு இருவருக்கும் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றார். காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் சாக துணிந்ததாக செய்தி வெளியானது. சுஜிபாலா இதனை மறுத்தார். நிச்சயிக்கப்பட்டபடி ரவிக்குமாருடன் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். 
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சுஜிபாலாவுக்கும், ரவிகுமாருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடி ஏற்பட்டு இனி சுஜிபாலாவுடன் திருமணம் இல்லை என்ற மனநிலைக்கு ரவிகுமார் வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நான் தற்போது‘உண்மை’ படத்தை இயக்கி வருகிறேன். அதில் சுஜிபாலாவுடன் இணைந்து நடிக்கவும் செய்கிறேன். என்னைப் பற்றியும், சுஜிபாலா பற்றியும் தவறான செய்திகள் பரவியுள்ளன. எனக்கும் சுஜிபாலாவுக்கும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. 
ஆனால் தற்போது எங்கள் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பிரிந்துவிட முடிவு செய்துள்ளோம். எனக்கும், சுஜிபாலாவுக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் திருமணம் நடக்காது. என்று டைரக்டர் ரவிகுமார் கூறியிருக்கிறாராம்.

விஜய் அண்ட் விஜய்யுடன் இணையும் சத்யராஜ்!

விஜய் அண்ட் விஜய்யுடன் இணையும் சத்யராஜ்!
   ’தாண்டவம்’ படத்தின் ரிசல்ட்டோ, அல்லது அந்த படத்தை சம்பந்தப் படுத்தி வந்த செய்திகளோ நல்லவிதமாய் இல்லாவிட்டாலும், அதன் இயக்குநர் விஜய்யின் கேரியர் நன்றாகவே போய்கொண்டிருக்கிறது.
இப்பொழுது இளையதளபதி விஜய்யை வெச்சு அவர் டைரக்ட் பண்ணப்போற படத்துல நடிகர் சத்யராஜ் ஒரு பவர்புல்லான ரோல் பண்ணப்போறதா நியூஸ் லீக் ஆகியிருக்கு.
ஷங்கர் டைரக்ட் பண்ணின ’நண்பன்’ படம் எப்படி விஜய்க்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததோ அதே அளவுக்கு அந்தப் படத்துல காலேஜ் புரபோஸரா நடிச்சிருந்த சத்யராஜூக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. அந்தப் படத்திற்குப் பிறகு சத்யராஜ் மீண்டும் விஜய்யுடன் இந்தப் படத்தில் இணைகிறாராம். மிகவும் பவர்புல்லான கேரக்டராக இருக்கும், அதேநேரத்தில் நெகட்டீவ் கேரக்டரும் இல்லை. ரொம்ப ஜாலியான, சுவாரஸ்மான கேரக்டராக இருக்குமாம். 
ஐரோப்பிய நாடுகளில் வருடக்கடைசியில் அதிக குளிரடிக்கும் என்பதால், எந்த நாட்டுக்கு செல்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லையாம். இன்னும் பெயர் வைக்கைப்படாத இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதக் கடைசியில் ஸ்டார்ட் ஆகிறது.

2.5 கோடி ரெடி : ’தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு சம்பளம்!

2.5 கோடி ரெடி : ’தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு சம்பளம்!

’தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதா கேரக்டரில் நயன்தாரா நடிக்க மறுத்தும் அவருக்கு தயாரிப்பாளர் ஏக்தாகபூர் 2.5  கோடி ரூபாய் சம்பளம் தரத் தயார் என துரத்துகிறாராம்.
தமிழில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்து தற்கொலை செய்து இறந்து போன சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை சொல்லும் ‘ தி டர்ட்டி பிக்சர்’ என்ற படம் ஹிந்தியில் ரிலீஸானது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். மிலன் ருத்ரியா டைரக்ட் செய்த இந்தப் படத்தை ஏக்தா கபூர் தயாரித்திருந்தார்.
படத்தில் வித்யாபாலன் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். படம் ரிலீஸானவுடன் அவருக்கு சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் அந்தப் படம் பெற்றுத் தந்தது. அந்தளவுக்கு அவருடைய கேரக்டர் பேசப்பட்டது. கடந்த வருடம் டிசம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம் ரூ. 18 கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூ. 117 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. 
‘டர்டி பிக்சர்’ படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கான நடிகர், நடிகை தேர்வு நடந்து வருகிறது.
இந்த ரீமேக் படங்களில் நடிக்க பல நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் நேரத்தில் இப்போது நயந்தாரா சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க வந்தால் அவருக்கு தமிழ்,தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து ரூ. 2.5 கோடி ரூபாய் சம்பளமாக தர தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ரெடியாக இருக்கிறாராம். தற்போது இருக்கும் பிரபல தென்னிந்திய நடிகைகள் யாருமே இவ்வளவு சம்பளம் வாங்கவில்லை. 
ஆனால், இப்படி கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறேன் என்று சொல்லியும் இப்படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதிக்கவில்லையாம். ‘ தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் ஏராளமான கவர்ச்சி காட்சிகளும், உடை குறைப்பு மற்றும் நெருக்கமான காதல் சீன்களும் இருப்பதால் நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

கனவு பலித்தது! - ஸ்ரீதேவியுடன் இணையும் ராம்கோபால் வர்மா

கனவு பலித்தது! - ஸ்ரீதேவியுடன் இணையும் ராம்கோபால் வர்மா
            விட்டால் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரை துப்பாக்கியால் சுட்டு விடுவாரோ என நினைக்கும் அளவுக்கு என்றைக்குமே ஸ்ரீதேவி மீது அதீத ப்ரியத்துடன் இருக்கும் டைரக்டர் ராம்கோபால் வர்மா. இப்போது ஸ்ரீதேவியை வைத்து ஒரு காமெடி படம் டைரக்ட் செய்யப் போகிறாராம்.
திருமணத்துக்குப் பிறகு கணவர் போனிகபூரின் புரொடக்‌ஷன் கம்பெனியின் வேலைகளை பார்த்து வந்த ஸ்ரீதேவி படங்களில் நடிக்காமல் விளப்பரப் படங்களில் மட்டுமே  நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு கவுரி ஷிண்டே சொன்ன ஸ்டோரி பிடித்துப் போனதால் ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அதுவும் மும்மொழிகளில் வெளியாகி இப்பவும் விடாமல் இருக்கும் ஸ்ரீதேவியின் ரசிகர்களை சந்தோசப்படுத்தி, தான் இன்னமும் ஸ்டார் தான் என்று நிரூபிக்க வைத்தது.
இப்போது தனது அடுத்த படமாக பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா டைரக்ட் செய்யும் ஒரு புதிய படத்தில் இணைகிறாராம்.
இந்தப் படம் ராம்கோபால் வர்மாவின் திகில்,கடத்தல்,ரத்தம் என்ற தற்போதைய பாணியில் இல்லாமல் 1991 ஆம் ஆண்டு ராம்கோபால் டைரக்‌ஷனில் ஸ்ரீதேவி வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான Kshana Kshanam தெலுங்கு படம் போல கலகலப்பாக இருக்குமாம்.
'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படம் ரிலீஸானவுடன் ரசிகர்களோடு ரசிகராய் தியேட்டரில் போய் படம் பார்க்கச் செல்வதை ஒரு வாரமாக உற்சாகமாக டிவிட் பண்ணிக் கொண்டிருந்தார் வர்மா. இப்போது தன் பேவரைட் ஸ்டாருடன் மீண்டும் இணைந்து வேலை பார்க்கும் கனவு பலிப்பதால் குஷியாய் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருக்கிறாராம் வர்மா.

ரஜினியின் கோச்சடையான் பொங்கல் ரிலீஸ்!

ரஜினியின் கோச்சடையான் பொங்கல் ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் படம் என்றாலே ஒரு பரபரப்பு தான். எந்திரனின் மெகாஹிட்டுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் ’கோச்சடையான்’.
முழுக்க முழுக்க புதிய தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான 12.12.2012 அன்று ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இப்போது அந்தப் படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் அன்று ரிலீஸாகும் என்று அதன் தயாரிப்பாளர் டாக்டர். முரளி மனோகர் தெரிவித்திருக்கிறார்.
இது ஒரு அனிமேஷன் படம் என்பதாலும், இதில் முதல்முறையாக முழுநீள 3டி மோஷன் கேப்சரிங் என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இன்னும் முழுதாக முடியவில்லை.
அதனால் அந்தப் பணிகள் முடிவதைப் பொறுத்து தான் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும். அனேகமாக பொங்கலுக்கு கோச்சடையான் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
அது உண்மையா? இல்லையா..? என்பது இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தெரிந்து விடுமாம்.

விஷாலுடன் ஜோடி சேர்கிறார் அர்ஜூன் மகள்!

விஷாலுடன் ஜோடி சேர்கிறார் அர்ஜூன் மகள்!

டைரக்டர் பூபதி பாண்டியன் டைரக்ட் செய்யும் புதிய படத்தில் ’ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
விரைவில் ரிலீஸாக இருக்கும் 'சமர்' படத்திற்குப் பிறகு விஷால் நடிக்கும் புதிய படம் தான் 'பட்டத்து யானை'.
இந்தப் படத்தை பூபதி பாண்டியன் டைரக்ட் செய்கிறார். 'மலைக்கோட்டை' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷாலும், பூபதி பாண்டியனும் இணையும் இரண்டாவது படம் இது.
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ’ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக அறிமுகமாகிறார். முக்கிய காமெடி கேரக்டரில் சந்தானம் நடிக்கிறாராம்.
படத்தின் ஸ்டோரியைச் சொன்னவுடன் ஐஸ்வர்யா இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். ஒரு பிரபல நடிகரின் மகளுடன் இணைந்து வேலை செய்யப்போவது எனக்கே ஒரு புது அனுபவமாக இருக்கும். படப்பிடிப்பை அடுத்த மாதம் ஸ்டார்ட் பண்ண ப்ளான் பண்ணியிருக்கிறேன் என்றார் பூபதி பாண்டியன்.
'மலைக்கோட்டை' படம் ஃபுல் அண்ட் ஃபுல் ஆக்‌ஷன் படமாக இருந்தது, அதே போல இந்தப் படமும் ஆக்‌ஷன் வித் காமெடி கலந்த படமாக இருக்குமாம். திருநெல்வேலி, காரைக்குடி, திருச்சி ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

ஸ்ரீதேவியின் மகள் நடிப்பாரா..? மாட்டாரா..?

ஸ்ரீதேவியின் மகள் நடிப்பாரா..? மாட்டாரா..?
      சுமார் 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் ரீ-எண்ட்ரி போட்டிருக்கும் ஸ்ரீதேவிக்கு படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வர ஆரம்பித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க அவரது மகள் ஜான்வி எப்போது ஹீரோயினாக நடிக்கப்போகிறார் என்பது தான் இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு ஜான்விக்கு 15 வயது தான் ஆகிறது. அவளுக்கு இன்னும் நடிக்கும் வயது வரவில்லை. அவள் நடிக்க இப்போது என்ன அவசரம் என்று சொன்னார் ஸ்ரீதேவி.
ஆனால் அடுத்த வருடம் அதாவது 16 வயதில் ஜான்வி கண்டிப்பாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விடுவார் என்று சொல்கிறார்கள் பாலிவுட் பட்சிகள்.
மகளை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவி எப்போதோ முடிவு செய்த விஷயம். அது உண்மைதான் என்பது போல ஜான்வி இப்போது சினிமாவுக்கு தேவையான டான்ஸ் க்ளாஸ், ஜிம் பயிற்சி என எல்லாவற்றையும் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.
ஸ்ரீதேவி மற்றும் போனிகபூர் இரண்டு பேரும் ஜான்வியை சினிமாவுக்குள் கொண்டு வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சொன்னாலும் அவர்கள் அதை நோக்கித்தான் செயல்படுகிறார்கள் என்பது மிகவும் சீக்ரெட்டாக இருக்கிறது.
 ஸ்ரீதேவி தனது சிறிய வயதிலேயே சினிமாவுக்குள் வந்தார். அனேகமாய் அம்மாவைப் போல மகள் ஜான்வியும் தனது இளம் வயதில் சினிமாவுக்குள் வருவார் என்று சொல்கிறார்கள்.
என்ன எப்படியும் இன்னும் ஒரு வருடத்துக்குள் தெரிந்து விடும்.

விஜய் ரசிகர்கள் ஐந்து தடவையாவது ‘துப்பாக்கி’யை பார்ப்பார்கள்! - ஏ.ஆர்.முருகதாஸ்

துப்பாக்கி' படத்தை ஒவ்வொரு விஜய் ரசிகரும் குறைந்தது ஐந்து தடவையாவது பார்ப்பார்கள் அந்தளவுக்கு படம் விஜய் ரசிகர்களின் படமாக இருக்கும் என்று டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ் கூறினார்.
தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கும் ’துப்பாக்கி’ படத்தின் ஆடியோ ரிலீஸ்  மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது...
“’துப்பாக்கி’ படத்தில் விஜய் சார் ரொம்ப ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார். என்னால முடிஞ்ச வரைக்கும் அவர்கிட்ட எவ்ளோ திறமைகள் இருக்கோ, அந்த திறமைகள் எல்லாவற்றையும் இந்த படத்தில் நான் பயன்படுத்தியிருக்கிறேன்.
பைட் சீன்களாகட்டும், ரொமான்ஸ் சீன்களாகட்டும் எல்லாவற்றிலும் ரொம்ப ரொம்ப இன்வால்வ்மெண்ட்டோட நடிச்சிருக்கார். அதிலும் டான்ஸை பத்தி அவர்கிட்ட கேட்கவே வேண்டாம். டான்ஸ்மாஸ்டர் அவரோட அசிஸ்டெண்ட்டுகளுக்கு சொல்லி கொடுப்பதை ஓரமா நின்னு பார்த்துக்கிட்டெ இருப்பார். ஷாட் ரெடியானவுடன் ஒரே டேக்ல அந்த மூவ்மெண்ட்டை ஆடி முடிச்சிடுவார். 
எனக்கு தெரிஞ்சி இந்தப் படத்தை விஜய் சாரோட ரசிகர்கள் ஒவ்வொருத்தரும் குறைந்தது ஐந்து தடவையாவது பார்ப்பாங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.
ஹீரோயின் காஜல் அகர்வால் நல்ல திறமையான நடிகை. ஒரு வடக்கத்திய பொண்ணை, அதுவும் தமிழ் சுத்தமா தெரியாத ஒரு பொண்ணை ஹீரோயினா நடிக்க வைக்கிறப்போ டயாலாக் பேச வைக்கிறதுல ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
ஆனா காஜலை பொருத்தவரைக்கும் ஒரு அக்மார்க் சென்னை பொண்ணு எப்படி பேசுவாங்களோ அப்படியே அழகா பேசி நடிச்சிருக்காங்க, படத்துல டயலாக் பேசுறப்போ லிப் மூவ்மெண்ட் ரொம்ப ரொம்ப பெர்பெக்ட்டா இருக்கும். படத்தை பார்க்குறப்போ இதை நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்குவீங்க என்றார்.