
நடிகர் ஸ்ரீகாந்த் மாமனாரான சாரங்கபாணியின் கல்லூரியில் வழங்கப்படும் சான்றிதழ் போலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் உட்பட 5 பேர்கள் எந்த நேரமும் போலீசாரால் கைது செய்யப்படலாம்.
நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா. பெரிய போராட்டமெல்லாம் செய்து ஸ்ரீகாந்த் வீட்டு வாசலில் டேரா போட்டு உண்ணாவிரதமெல்லாம் இருந்து அவரைக் கரம் பிடித்தார். அவரது அப்பாவான சாரங்கபாணிக்கு ஊட்டியில் சொந்தமாக ஒரு கல்லூரி உள்ளது. ஊட்டி உசிலமேடு செல்லும் வழியில் உள்ள இந்த கல்லூரியில் உணவு மற்றும் ஓட்டல் நிர்வாகம் குறித்த படிப்புகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்தக் கல்லூரியில் பல ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த கல்லூரியில் பொறியியல் வகுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதிலும் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து படித்தனர். கல்லூரியில் படித்து முடித்தபின் வழங்கப்பட்ட சான்றிதழ் அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையை சேர்ந்த பிரித்விராஜ், பழனியை சேர்ந்த விக்னேஷ்குமார், ராஜ்குமார், புதுச்சேரியை சேர்ந்த சாகுல் அமீது, பொள்ளாச்சியை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகிய மாணவர்கள் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனுவை அனுப்பியிருக்கிறார்களாம்.
அந்த புகாரில்.., நான் கடந்த 2006-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். இந்த கல்லூரி மூலம் நடத்தப்படும் என்ஜினீயரிங் படிப்புக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு ரூ.5 லட்சம் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதை நம்பி நான் இந்த தொகையை செலுத்தி படித்தேன். படிப்பு முடிந்ததும் அதற்கான சான்றிதழை எனக்கு தபால் மூலம் கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்தது. அந்த சான்றிதழை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சரி பார்த்த போது அந்த படிப்பிற்கு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் அளிக்கவில்லை என்று தெரிவித்து விட்டனர்.
இதனால் நான் வேலையில் சேர முடியவில்லை. எனது படிப்பு வீணாகிவிட்டது. எனவே எனக்கு போலி சான்றிதழ் வழங்கிய கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கல்லூரியை நடத்தி வரும் சென்னையை சேர்ந்த சாரங்கபாணி, அவருடைய மனைவி சாலினி, மகள் வந்தனா, மருமகன் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஊட்டி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, மாமியார் சாலினி, கல்லூரி மேலாளர் அரோஸ்குமார் உள்ளிட்டோர் மீது ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இந்த கல்லூரியில் பொறியியல் வகுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதிலும் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து படித்தனர். கல்லூரியில் படித்து முடித்தபின் வழங்கப்பட்ட சான்றிதழ் அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையை சேர்ந்த பிரித்விராஜ், பழனியை சேர்ந்த விக்னேஷ்குமார், ராஜ்குமார், புதுச்சேரியை சேர்ந்த சாகுல் அமீது, பொள்ளாச்சியை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகிய மாணவர்கள் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனுவை அனுப்பியிருக்கிறார்களாம்.
அந்த புகாரில்.., நான் கடந்த 2006-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். இந்த கல்லூரி மூலம் நடத்தப்படும் என்ஜினீயரிங் படிப்புக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு ரூ.5 லட்சம் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதை நம்பி நான் இந்த தொகையை செலுத்தி படித்தேன். படிப்பு முடிந்ததும் அதற்கான சான்றிதழை எனக்கு தபால் மூலம் கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்தது. அந்த சான்றிதழை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சரி பார்த்த போது அந்த படிப்பிற்கு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் அளிக்கவில்லை என்று தெரிவித்து விட்டனர்.
இதனால் நான் வேலையில் சேர முடியவில்லை. எனது படிப்பு வீணாகிவிட்டது. எனவே எனக்கு போலி சான்றிதழ் வழங்கிய கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கல்லூரியை நடத்தி வரும் சென்னையை சேர்ந்த சாரங்கபாணி, அவருடைய மனைவி சாலினி, மகள் வந்தனா, மருமகன் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஊட்டி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, மாமியார் சாலினி, கல்லூரி மேலாளர் அரோஸ்குமார் உள்ளிட்டோர் மீது ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment