
ராகவா லாரன்ஸ் டைரக்ஷனில் லேட்டஸ்ட்டாக தெலுங்கில் ரிலீஸான படம் ‘ரிபெல்’. அங்கு பிரபல ஹீரோவாக இருக்கும் பிரபாஸூம், தமன்னாவும் நடித்திருக்கும் இப்படத்தில் படத்தைக்காட்டிலும் படத்தில் தமன்னா தொப்புள் கவர்ச்சி ரொம்பவும் பாப்புலராகி வருகிறது.
ஆனா இந்த 17 கோடி பிரச்சினைக்கு அது காரணமில்லை. ’காஞ்சனா’ படம் தெலுங்கில் ஓடினாலும் ஓடியது ராகவா லாரன்ஸ் அங்குள்ள தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கும் டார்ச்சர்கள் கொஞ்சம் ஓவராகத்தான் போய்க் கொண்டிருக்கிறதாம்.
ஆனால் அவர்களும் எவ்வளவு தான் பொறுப்பார்கள். அதனால் தான் ராகவா லாரன்ஸ் மீது அங்குள்ள புரொடியூசர் கவுன்சிலில் இரண்டு தயாரிப்பாளர்கள் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கிறார்கள்..
ராகவா லாரன்ஸ் டைரக்ஷனில் ’ரிபெல்’ படத்தை தயாரித்த ஜே. பகவான் மற்றும் புல்லா ராவ் ஆகியோர் தான் ராகவா லாரன்ஸ் மீது தெலுங்கு புரொடியூசர் கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
ரிபெல் படத்தை ஃப்ர்ஸ்ட் காப்பி அடிப்படையில் 22.5 கோடிக்குள் முடித்துத் தருவதாக ராகவா லாரன்ஸ் கூறினார். ஆனால், படத்திற்கு தேவையே இல்லாத செலவுகளால் படத்தை 40 கோடி வரை செலவு செய்து இழுத்து விட்டார் என்பது தான் லாரன்ஸ் மீது அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு.
ஏற்கனவே சூட்டிங் சமயத்தில் படத்தின் நாயகன் பிரபாஸுக்கும் லாரன்சுக்கும் முட்டிக்கொண்டது. சூட்டிங்கை ஜவ்வாய் இழுக்கிறார் என டென்சனாய் விட்டாராம் பிரபாஸ்.
லாரன்ஸ் மட்டும் சும்மா இருப்பாரா..? பதிலுக்கு அவரும் அங்குள்ள டைரக்டர் யூனியனில் ’ரிபெல்’ படத்தின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமையை எனக்குச் சொல்லாமலேயே விற்று விட்டார்கள் எனவும், டப்பிங் உரிமையை தனக்குத் தருவதாக சொல்லியிருந்தார்கள் எனவும் படத்தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
என்னா... பாஸூ 22 கோடி எங்க இருக்கு? 40 கோடி எங்க இருக்கு..? கொஞ்சமாவது மனசாட்சி வேணாமா..? லாரன்ஸ் என அந்த ஊர் புரொட்யூசர் கௌன்சிலில் குரல் ஒலிக்கத்துவங்கிவிட்டதாம்.
No comments:
Post a Comment