Friday, 12 October 2012

2.5 கோடி ரெடி : ’தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு சம்பளம்!

2.5 கோடி ரெடி : ’தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு சம்பளம்!

’தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதா கேரக்டரில் நயன்தாரா நடிக்க மறுத்தும் அவருக்கு தயாரிப்பாளர் ஏக்தாகபூர் 2.5  கோடி ரூபாய் சம்பளம் தரத் தயார் என துரத்துகிறாராம்.
தமிழில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்து தற்கொலை செய்து இறந்து போன சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை சொல்லும் ‘ தி டர்ட்டி பிக்சர்’ என்ற படம் ஹிந்தியில் ரிலீஸானது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். மிலன் ருத்ரியா டைரக்ட் செய்த இந்தப் படத்தை ஏக்தா கபூர் தயாரித்திருந்தார்.
படத்தில் வித்யாபாலன் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். படம் ரிலீஸானவுடன் அவருக்கு சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் அந்தப் படம் பெற்றுத் தந்தது. அந்தளவுக்கு அவருடைய கேரக்டர் பேசப்பட்டது. கடந்த வருடம் டிசம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம் ரூ. 18 கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூ. 117 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. 
‘டர்டி பிக்சர்’ படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கான நடிகர், நடிகை தேர்வு நடந்து வருகிறது.
இந்த ரீமேக் படங்களில் நடிக்க பல நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் நேரத்தில் இப்போது நயந்தாரா சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க வந்தால் அவருக்கு தமிழ்,தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து ரூ. 2.5 கோடி ரூபாய் சம்பளமாக தர தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ரெடியாக இருக்கிறாராம். தற்போது இருக்கும் பிரபல தென்னிந்திய நடிகைகள் யாருமே இவ்வளவு சம்பளம் வாங்கவில்லை. 
ஆனால், இப்படி கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறேன் என்று சொல்லியும் இப்படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதிக்கவில்லையாம். ‘ தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் ஏராளமான கவர்ச்சி காட்சிகளும், உடை குறைப்பு மற்றும் நெருக்கமான காதல் சீன்களும் இருப்பதால் நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

No comments:

Post a Comment