
த மிழில் 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனேனா. முதல் படம் பாடல்களுக்காக ஹிட்டானாலும் தொடர்ந்து அவர் தமிழில் நடித்த 'வம்சம்' உட்பட எந்த படங்களும் பெரிதாக ஓடவில்லை.
பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது அவர் புதுமுகங்கள் ஜோடியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
சுனைனா லேட்டஸ்ட்டாக நடித்த ‘பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம்’ படத்தில் கூட அவருக்கு ஜோடியாக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பெப்சி விஜயன் மகன் சபரீஷ் என்ற புதுமுகம் தான் ஹீரோவாக நடித்தார்.
சுனேன இப்போது சீனுராமசாமி இயக்கும் ‘நீர்பறவை’ படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கும் ‘நதிகள் நனைவதில்லை’ படத்திலும் இன்னொரு ஸ்டண்ட் மாஸ்டரான ஜாகுவார் தங்கத்தின் மகன் ஜெய்ஜித் ஜோடியாக நடிக்கிறார். இப்படி புதுமுக ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதை மீடியாக்கள் பட வாய்ப்புகள் இல்லாததால் சுனேனா இப்படி புதுமுக ஹீரோக்களுடன் ஜோடி சேர்கிறார் என எழுதி வருகின்றன.
இதனால் கடுப்பில் இருக்கும் அவர் ஒரு காலத்தில் புதுமுகங்களாக வந்தவர்கள் தான் இப்போது பிஸியான ஹீரோக்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது என்னை மட்டும் புதுமுகங்களுடன் நடிக்கும் நடிகை என்று எழுதுவது சரியில்லை. எதுவாக இருந்தாலும் என்னிடம் ஒருவார்த்தை கேட்டுவிட்டு எழுதுங்கள் என்று புலம்பியிருக்கிறார்.
No comments:
Post a Comment