
’அய்யாவழி’ ‘முத்துக்கு முத்தாக’ உள்பட சில படங்களில் நடித்த சுஜிபாலா தற்போது‘உண்மை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பி. ரவிக்குமார் இயக்கி நடித்து வருகிறார்.
இந்தப் படப்பிடிப்பில் சுஜிபாலாவுக்கும், படத்தின் டைரக்டர் ரவிக்குமாருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இருவீட்டாரின் பெற்றோர் சம்மதத்துடன் சுஜிபாலாவின் சொந்த ஊரான நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் கூட நடந்தது.
பிறகு இருவருக்கும் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றார். காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் சாக துணிந்ததாக செய்தி வெளியானது. சுஜிபாலா இதனை மறுத்தார். நிச்சயிக்கப்பட்டபடி ரவிக்குமாருடன் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சுஜிபாலாவுக்கும், ரவிகுமாருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடி ஏற்பட்டு இனி சுஜிபாலாவுடன் திருமணம் இல்லை என்ற மனநிலைக்கு ரவிகுமார் வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நான் தற்போது‘உண்மை’ படத்தை இயக்கி வருகிறேன். அதில் சுஜிபாலாவுடன் இணைந்து நடிக்கவும் செய்கிறேன். என்னைப் பற்றியும், சுஜிபாலா பற்றியும் தவறான செய்திகள் பரவியுள்ளன. எனக்கும் சுஜிபாலாவுக்கும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால் தற்போது எங்கள் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பிரிந்துவிட முடிவு செய்துள்ளோம். எனக்கும், சுஜிபாலாவுக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் திருமணம் நடக்காது. என்று டைரக்டர் ரவிகுமார் கூறியிருக்கிறாராம்.
No comments:
Post a Comment