
சென்னையின் முக்கிய அடையாளமாக மாறிப்போன ட்ராஃபிக்கை பற்றிப் பேசும் ஒரு படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடிக்கிறார். மலையாளத்தின் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிய ’ட்ராபிக்’ படம் தமிழில் ’சென்னையில் ஒருநாள்’ என்ற டைட்டிலுடன் ரிலீஸ் ஆகிறது.
மனித வாழ்க்கையின் வெவ்வேறு சூழல்களில்...வெவ்வெறு விதியின் பிடியில் சிக்கியிருக்கும் மனிதர்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து இணைப்பதுதான் சென்னையில் ஒரு நாளின் குறிக்கோள் !
'அன்போ, வெறுப்போ, ஆசையோ, கோபமோ, துரோகமோ, துயரமோ எந்த உணர்வாயினும் முக்கியமான தருணங்களில் வெளிப்படும் நுணுக்கமான மனித உணர்வுகள் வாழ்வில் பல அதிரடியான திருப்பங்களை ஏற்படுத்தி விடும். அதுபோல, துயரத்தின் விளிம்பில் இருக்கும் ஒருவர் எடுக்கும் முடிவு, இன்னொருவருக்கு வரமான வாழ்க்கையாக மாறும் அதிசயத்தை இந்த படம் உரக்கப் பேசப் போகிறதாம்.
இதன் மூலம் ’உடல் உறுப்பு தானம்’ எனும் உயர்வான விஷயம் பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் பரவப் போவது ஒரு போனஸ் !' என்கிறார் படத்தை 'ஐ' பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கும் ராதிகாசரத்குமார். இப்படத்தினை அவருடன் இணைந்து தயாரிப்பவர், மலையாள ’ட்ராபிக்’ படத்தை தயாரித்த லிஸ்டின்.
"விறுவிறுப்பாய் நகரும் திரைக்கதையில், சென்னை நகரின் பரபரப்பான டிராஃபிக்கும் ஒரு கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறதாம். ஒரு உயிரைக் காப்பாற்றும் மனசு இந்த ஜன சந்தடியில் இருக்குமா...? ரோட்டில் ஏற்படும் பல்வேறு தடைகளைத் கடந்து ஒரு உயிர் பிழைக்குமா..? என கடைசி நொடி வரை படம் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும்.
இப்படியொரு உயிரோட்டமான கதையை தமிழர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். அந்த நம்பிக்கையோடுதான் களம் இறங்கியிருக்கிறோம்!" என்கிறார் லிஸ்டின்.
சென்னையின் முக்கிய பிரச்சனையான ’ட்ராபிக்’கைப் பற்றி பேசும் இந்தப் படத்தில், டைரக்டர் ஷகித்காதர் ஏதாவது தீர்வு சொல்லியிருக்கிறாரா..?
படம் ரிலீஸ் ஆனால் தெரிந்து விடும்.
No comments:
Post a Comment