
தமிழில் ‘நேருக்கு நேர்’ படம் மூலம் பிரபலமான சிம்ரன் ‘நட்புக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘ரமணா‘, ‘பிதாமகன்’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார். 2003-ல் தீபக் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அதீப், அதித் என இரு மகன்கள் உள்ளனர்.
சிம்ரன் சினிமாவில் பாப்புலரான நடிகையாக இருந்தபோது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இடம் வாங்கி போட்டார். தற்போது அங்கு தான் பங்களா வீடு கட்டி குடியேறியுள்ளார்.
திருமணத்துக்குப் பின்பு சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவு செய்து வாய்ப்புகளுக்காக காத்து இருந்தார். ஆனால் அவருக்கு படவாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக சுந்தர்.சியுடன் ‘ஐந்தாம் படை’ படத்தில் நடித்தார். கதாநாயகிக்கு இணையான கேரக்டரில் நடிக்க தயார் என்று கூறி கேரக்டருக்காக காத்து இருந்தார். ஆனால் யாரும் அழைக்கவில்லை.
அதனால் சின்னத்திரையில் சில சீரியல்களிலும், சில டிவி ஷோக்களிலும் தலை காட்டினார். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் சின்னத்திரையை நம்பி காலத்தை ஓட்ட முடியும் என்று யோசித்தவர் படங்கள் இல்லாததால் கடந்த சில வாரங்களாக விரக்தியடைந்த நிலையில் இருந்த அவர் சென்னையில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு மும்பையில் குடியேற முடிவு செய்து உள்ளார்.
மும்பையில் உள்ள நாசிக் நெடுஞ்சாலையில் சிம்ரனுக்கு ‘ரிஷிபார்ம்ஸ்’ என்ற பெயரில் 70 ஏக்கர் நிலம் உள்ளது. அங்குபோய் தனது கணவருடன் செட்டிலாகும் முடிவில் இருக்கிறாராம் சிம்ரன்.
No comments:
Post a Comment