
அதில் முக்கியமானது படத்தின் நீளம் தான். கிட்டத்தட்ட ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் படத்தின் நீளம் தான் ஒரு பெரும் குறையாக சொல்லப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஜெட் வேகத்தில் செல்லும் படத்தின் முதல்பாகத்தைப் போல இல்லாமல், பால் பவுடருக்கு விளம்பரப்படம் எடுத்ததைப் போல இருக்கறதாம் படத்தில் இரண்டாம் பாகம். இதனால் எரிச்சலின் உச்சத்துக்கே போகும் ரசிகர்கள் தியேட்டரில் ஓவென்று கத்திக் கொண்டு கண்டபடி கமெண்ட் அடிக்கிறார்களாம்.
இதனால் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கும் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர்களும் தியேட்டர் ஓனர்களும் படத்தின் நீளத்தை குறைத்துத் தருமாறு படத்தின் டைரக்டர் கே.வி.ஆனந்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் கே.வி.ஆனந்த் ”கட்டா அதுமட்டும் முடியவே முடியாது” என்று சொல்லி விட்டாராம்.
”படத்தின் நீளத்தை குறைக்கவில்லை என்றால் படத்தை தொடர்ந்து ஓட்டுவது ரொம்ப கஷ்டம்” என்று தியேட்டர் ஓனர்கள் எச்சரிக்கவே வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமே படத்தின் எடிட்டரை கூப்பிட்டு தேவையற்ற 21 நிமிட சீன்களை கட் பண்ணிவிட்டாராம்.
இதனால் கே.வி. ஆனந்த் டென்சனில் இருக்கிறாராம்.
No comments:
Post a Comment