Friday, 12 October 2012

விஜய் ரசிகர்கள் ஐந்து தடவையாவது ‘துப்பாக்கி’யை பார்ப்பார்கள்! - ஏ.ஆர்.முருகதாஸ்

துப்பாக்கி' படத்தை ஒவ்வொரு விஜய் ரசிகரும் குறைந்தது ஐந்து தடவையாவது பார்ப்பார்கள் அந்தளவுக்கு படம் விஜய் ரசிகர்களின் படமாக இருக்கும் என்று டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ் கூறினார்.
தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கும் ’துப்பாக்கி’ படத்தின் ஆடியோ ரிலீஸ்  மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது...
“’துப்பாக்கி’ படத்தில் விஜய் சார் ரொம்ப ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார். என்னால முடிஞ்ச வரைக்கும் அவர்கிட்ட எவ்ளோ திறமைகள் இருக்கோ, அந்த திறமைகள் எல்லாவற்றையும் இந்த படத்தில் நான் பயன்படுத்தியிருக்கிறேன்.
பைட் சீன்களாகட்டும், ரொமான்ஸ் சீன்களாகட்டும் எல்லாவற்றிலும் ரொம்ப ரொம்ப இன்வால்வ்மெண்ட்டோட நடிச்சிருக்கார். அதிலும் டான்ஸை பத்தி அவர்கிட்ட கேட்கவே வேண்டாம். டான்ஸ்மாஸ்டர் அவரோட அசிஸ்டெண்ட்டுகளுக்கு சொல்லி கொடுப்பதை ஓரமா நின்னு பார்த்துக்கிட்டெ இருப்பார். ஷாட் ரெடியானவுடன் ஒரே டேக்ல அந்த மூவ்மெண்ட்டை ஆடி முடிச்சிடுவார். 
எனக்கு தெரிஞ்சி இந்தப் படத்தை விஜய் சாரோட ரசிகர்கள் ஒவ்வொருத்தரும் குறைந்தது ஐந்து தடவையாவது பார்ப்பாங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.
ஹீரோயின் காஜல் அகர்வால் நல்ல திறமையான நடிகை. ஒரு வடக்கத்திய பொண்ணை, அதுவும் தமிழ் சுத்தமா தெரியாத ஒரு பொண்ணை ஹீரோயினா நடிக்க வைக்கிறப்போ டயாலாக் பேச வைக்கிறதுல ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
ஆனா காஜலை பொருத்தவரைக்கும் ஒரு அக்மார்க் சென்னை பொண்ணு எப்படி பேசுவாங்களோ அப்படியே அழகா பேசி நடிச்சிருக்காங்க, படத்துல டயலாக் பேசுறப்போ லிப் மூவ்மெண்ட் ரொம்ப ரொம்ப பெர்பெக்ட்டா இருக்கும். படத்தை பார்க்குறப்போ இதை நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்குவீங்க என்றார்.

No comments:

Post a Comment