Wednesday, 17 October 2012

விஜய் படத்தில் ஹீரோவாகும் போனிகபூரின் மகன்!

விஜய் படத்தில் ஹீரோவாகும் போனிகபூரின் மகன்!\      விஜய் நடித்து தமிழில் மெகாஹிட்டான ’கில்லி’ படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் விஜய் நடித்த ஹீரோ கேரக்டரில் போனிகபூரின் மகன் அர்ஜீன் கபூர் ஹீரோவாக நடிக்கிறார்.
தெலுங்கில் ’ஒக்கடு’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்ட படம் தமிழில் ’கில்லி’ என்ற பெயரில் ரீமேக் ஆகி இங்கேயும் வசூலில் சக்கை போடு போட்டு மெகாஹிட் படமானது.
விஜய், த்ரிஷா. காம்பினேஷனில் பட்டையை கிளப்பின இந்தப் படம் இப்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.
 ஹிந்தியில் நடிகரும் தயாரிப்பாளருமான போனிகபூரின் மகன் அர்ஜூன் கபூர் ஹீரோவாக நடிக்கிறார்.
ரீமேக் செய்வதற்கான பெர்மிசனை வாங்கி விட்ட போனிகபூர் இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ப்ளான் பண்ணியிருக்கிறாராம்.
’2 ஸ்டேட்ஸ்’ உட்பட மூன்று ஹிந்திப் படங்களில் அர்ஜூன்கபூர் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இந்தப் படத்தை அடுத்த வருஷன் ஜூன் மாதன் ஆரம்பிக்க இருப்பதாக போனி கூறியிருக்கிறார்.
இந்தப் படத்தின் டைட்டில், ஹீரோயின் மற்றும் படத்தை டைரக்ட் செய்யும் டைரக்டர் யார்? யார்? என்ற பல முக்கியமான விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை.

அடேங்கப்பா..? : ’துப்பாக்கி’ தெலுங்கு ரைட்ஸ் 15 கோடி!!!

அடேங்கப்பா..? : ’துப்பாக்கி’ தெலுங்கு ரைட்ஸ் 15 கோடி!!!
     கோலிவுட்டின் டாப் ஹீரோக்களின் காட்டில் எப்போதுமே அடைமழைதான்; பணமழை. அவர்கள் நடித்த படங்களின் ரிசல்ட் பாஸா பெயிலோ ஆனால் அடுத்தடுத்த படங்களின் பிஸினெஸ் வால்யூ மட்டும் கூடிக்கொண்டே செல்கிறது.
அவர்கள் பிரபல டைரக்டர்களுடன் சேர்ந்து விட்டால் அந்த படத்தின் பிஸினஸ் எல்லா சைடிலும் கோடிகளை அள்ளும். அப்படித்தான் விஜய் நடித்த ’துப்பாக்கி’ படத்தின் தெலுங்கு ரைட்ஸ் சுமார் 15 கோடி ரூபாய் என்ற அளவில் விலை போயிருக்கிறதாம்.
ஏ.ஆர்.முருகதாஸ்,விஜய்,காஜல் அகர்வால் என பெரிய காம்பினேஷனில் ரெடியாகி வரும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். விஜய்க்கு முந்தைய படமான ஷங்கரின் ’நண்பன்’ படம் மெகாஹிட் படமாக அமைந்தது. அதேபோல ஏ.ஆர்.முருகதாஸூம் ஹிந்தியில் போய் ’கஜினி’ படத்தை ஹிட்டாக்கி விட்டு வந்தார். அவரை நம்பி படம் எடுக்க பணத்தை கோடிகளில் கொட்டி கொடுக்க பல ஃபாரீன் தயாரிப்பி நிறுவனங்களே இப்போது க்யூவில் நிற்கிறது.
இந்த இருவரும் சேர்ந்திருக்கும் படம் ’துப்பாக்கி’ என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தப் படத்தை தெலுங்கு ரைட்ஸுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு இப்போது தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ஷோபாராணி இந்தப் படத்தை சுமார் 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.
கடந்த சில வருடங்களால் தமிழில் மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்கள் எல்லாமே தெலுங்கில் ரீமேக்காகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது, அதனால் தான் தமிழ்ப்படங்களின் தெலுங்கு ரைட்ஸுக்கு பெரிய அளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
வரும் தீபாவளியன்று ’துப்பாக்கி’ ரிலீஸ் ஆகிறது.

அட இங்கப் பார்றா.. : இனிமே அமலாபாலுக்கு அப்பா தான் மேனேஜராம்..!?

அட இங்கப் பார்றா.. : இனிமே அமலாபாலுக்கு அப்பா தான் மேனேஜராம்..!?
    கைவசம் ‘நிமிர்ந்து நில்’ என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் வைத்துக்கொண்டு மார்க்கெட் ரீதியாக டம்மியாகக் கிடக்கும் நடிகை அமலாபால், போனவாரம் எட்டாவது முறையாக தனது கால்ஷீட் மேனேஜரை மாற்றி உலக சாதனை படைத்திருக்கிறார்.
தங்களது மார்க்கெட் எப்போதெல்லாம் டவுன் ஆகிறதோ அப்போதெல்லாம் நடிகைகள் உடைகளுக்கு அடுத்த படியாக மாற்றுவது மேனேஜர்களைத் தான்.
அந்த வரிசையில் ‘விகடகவி’ என்ற ஸ்மால் பட்ஜெட் படத்தில் படத்தில், தனது கேரள மேனேஜர் தயவில் முப்பதாயிரம் ரூபாய் சொச்சம் சம்பளத்தில் அறிமுகமான அமலாபால், அந்தப் படத்தின் ஷூட்டிங் முடியும் முன்பாகவே தனது முதல் மேனேஜரை மாற்றி தனது முதல் சாதனைக் கணக்கை துவங்கினார்.
அந்தக் கணக்கு இப்போது நீண்டு, நடிக்க வந்த இரண்டே வருடங்களில் இப்போது எட்டாவதாக தனது மேனேஜரை மாற்றியிருக்கிறார் அமலாபால்.
ஆமாம், இனிமேல் அமலாபாலின் அப்பா தான் அவருடைய கால்ஷீட் மேனேஜர். இனியும் மேனேஜரை வைத்து அடிக்கடி நீக்கினால் பேர் டேமேஜ் ஆகிவிடும் என்று நினைத்தாரோ..? என்னவோ..? அவரது அப்பாவுக்கே மேனேஜர் ட்ரெயினிங் கொடுத்து வருகிறாராம் அமலா.
அது இருக்கட்டும்.. மேனேஜர்  வேலையில இருக்கிற டென்சனையும் மத்த சகலவிதமான பிரசரையும் சமாளிச்சு பார்க்க அப்பாவால முடியுமா அமலா? முடிஞ்சா சரிதான்.

போலி சான்றிதழ் புகாரில் பலே மாமனார் : போலீசில் சிக்குகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்?

போலி சான்றிதழ் புகாரில் பலே மாமனார் : போலீசில் சிக்குகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்?
      நடிகர் ஸ்ரீகாந்த் மாமனாரான சாரங்கபாணியின் கல்லூரியில் வழங்கப்படும் சான்றிதழ் போலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் உட்பட 5 பேர்கள் எந்த நேரமும் போலீசாரால் கைது செய்யப்படலாம்.
நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா. பெரிய போராட்டமெல்லாம் செய்து ஸ்ரீகாந்த் வீட்டு வாசலில் டேரா போட்டு உண்ணாவிரதமெல்லாம் இருந்து அவரைக் கரம் பிடித்தார். அவரது அப்பாவான சாரங்கபாணிக்கு ஊட்டியில் சொந்தமாக ஒரு கல்லூரி உள்ளது. ஊட்டி உசிலமேடு செல்லும் வழியில் உள்ள இந்த கல்லூரியில் உணவு மற்றும் ஓட்டல் நிர்வாகம் குறித்த படிப்புகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்தக் கல்லூரியில் பல ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த கல்லூரியில் பொறியியல் வகுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதிலும் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து படித்தனர். கல்லூரியில் படித்து முடித்தபின் வழங்கப்பட்ட சான்றிதழ் அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையை சேர்ந்த பிரித்விராஜ், பழனியை சேர்ந்த விக்னேஷ்குமார், ராஜ்குமார், புதுச்சேரியை சேர்ந்த சாகுல் அமீது, பொள்ளாச்சியை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகிய மாணவர்கள் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனுவை அனுப்பியிருக்கிறார்களாம்.

அந்த புகாரில்.., நான் கடந்த 2006-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். இந்த கல்லூரி மூலம் நடத்தப்படும் என்ஜினீயரிங் படிப்புக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு ரூ.5 லட்சம் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதை நம்பி நான் இந்த தொகையை செலுத்தி படித்தேன். படிப்பு முடிந்ததும் அதற்கான சான்றிதழை எனக்கு தபால் மூலம் கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்தது. அந்த சான்றிதழை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சரி பார்த்த போது அந்த படிப்பிற்கு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் அளிக்கவில்லை என்று தெரிவித்து விட்டனர்.

இதனால் நான் வேலையில் சேர முடியவில்லை. எனது படிப்பு வீணாகிவிட்டது. எனவே எனக்கு போலி சான்றிதழ் வழங்கிய கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கல்லூரியை நடத்தி வரும் சென்னையை சேர்ந்த சாரங்கபாணி, அவருடைய மனைவி சாலினி, மகள் வந்தனா, மருமகன் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஊட்டி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, மாமியார் சாலினி, கல்லூரி மேலாளர் அரோஸ்குமார் உள்ளிட்டோர் மீது ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனசாட்சி இல்லாமல் 17 கோடியை வீணாக்கிய லாரன்ஸ்! புரொட்யூசர் புகார்

மனசாட்சி இல்லாமல் 17 கோடியை வீணாக்கிய லாரன்ஸ்! புரொட்யூசர் புகார்
    ராகவா லாரன்ஸ் டைரக்‌ஷனில் லேட்டஸ்ட்டாக தெலுங்கில் ரிலீஸான படம் ‘ரிபெல்’. அங்கு பிரபல ஹீரோவாக இருக்கும் பிரபாஸூம், தமன்னாவும் நடித்திருக்கும் இப்படத்தில் படத்தைக்காட்டிலும் படத்தில் தமன்னா தொப்புள் கவர்ச்சி ரொம்பவும் பாப்புலராகி வருகிறது.
ஆனா இந்த 17 கோடி பிரச்சினைக்கு அது காரணமில்லை. ’காஞ்சனா’ படம் தெலுங்கில் ஓடினாலும் ஓடியது ராகவா லாரன்ஸ் அங்குள்ள தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கும் டார்ச்சர்கள் கொஞ்சம் ஓவராகத்தான் போய்க் கொண்டிருக்கிறதாம்.
ஆனால் அவர்களும் எவ்வளவு தான் பொறுப்பார்கள். அதனால் தான் ராகவா லாரன்ஸ் மீது அங்குள்ள புரொடியூசர் கவுன்சிலில் இரண்டு தயாரிப்பாளர்கள் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கிறார்கள்..
ராகவா லாரன்ஸ் டைரக்‌ஷனில் ’ரிபெல்’ படத்தை தயாரித்த ஜே. பகவான் மற்றும் புல்லா ராவ் ஆகியோர் தான் ராகவா லாரன்ஸ் மீது தெலுங்கு புரொடியூசர் கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
ரிபெல் படத்தை ஃப்ர்ஸ்ட் காப்பி அடிப்படையில் 22.5 கோடிக்குள் முடித்துத் தருவதாக ராகவா லாரன்ஸ் கூறினார். ஆனால், படத்திற்கு தேவையே இல்லாத செலவுகளால் படத்தை 40 கோடி வரை செலவு செய்து இழுத்து விட்டார் என்பது தான் லாரன்ஸ் மீது அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு.
ஏற்கனவே சூட்டிங் சமயத்தில் படத்தின் நாயகன் பிரபாஸுக்கும் லாரன்சுக்கும் முட்டிக்கொண்டது. சூட்டிங்கை ஜவ்வாய் இழுக்கிறார் என டென்சனாய் விட்டாராம் பிரபாஸ்.
லாரன்ஸ் மட்டும் சும்மா இருப்பாரா..? பதிலுக்கு அவரும் அங்குள்ள டைரக்டர் யூனியனில் ’ரிபெல்’ படத்தின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமையை எனக்குச் சொல்லாமலேயே விற்று விட்டார்கள் எனவும், டப்பிங் உரிமையை தனக்குத் தருவதாக சொல்லியிருந்தார்கள் எனவும் படத்தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
என்னா... பாஸூ 22 கோடி எங்க இருக்கு? 40 கோடி எங்க இருக்கு..? கொஞ்சமாவது மனசாட்சி வேணாமா..? லாரன்ஸ் என அந்த ஊர் புரொட்யூசர் கௌன்சிலில் குரல் ஒலிக்கத்துவங்கிவிட்டதாம்.

நான் ஈ - ஒரு அப்பட்டமான காப்பி? அடச்சே..

 நான் ஈ - ஒரு அப்பட்டமான காப்பி? அடச்சே..

           இந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களில்(ஏன் மொத்த இந்தியப்படங்களில்) மிகப்பெரிய வெற்றியையும், பாராட்டுக்களையும் ஒரு சேரப் பெற்ற படம் நான் ஈ.
 ஒரு சாதாரண ஈ யை ஹீரோவாக்கி, அதில் ஒரு அழகான காதல்கதையை கலந்து, அட்டகாசமாய் திரைக்கதையமைத்து.. டைரக்டர்னா அது இவர்தான்யா.. மனுசன் கன்டினுயஸா கலக்கிட்டு இருக்காரே.... நிறைய பேர் ஹாலிவுட் மாதிரி படம்னு பேசிகிட்டு டிவிடியை காப்பியடிச்சுட்டு இருக்கப்ப நேரா அங்கயே போய் ரிலீஸாகுற லெவல்ல ஒரு படத்தைப் பண்ணிட்டாரே என தமிழ்,தெலுங்கு, இந்தி என டோட்டலாய் இந்திய திரையுலகமும், ரசிகர்களும் ஒன்று கூடி வியந்து வியந்து பாராட்டிய படம். 
நம்மாளுங்களும் ஹாலிவுட் லெவல்ல போயாச்சு என நாம் காலரைத் தூக்குவிட்டுக்கோண்டிருக்கும் போது நம்மளை பாத்து போங்கடா கேணப்பயலுகளா என பல்லிளிக்கும் செய்தி ஒன்று வந்திருக்கிறது.  
காக்ரோச் (கரப்பான்பூச்சி) என்கிற திரைப்படம். லூக் ஈவ் என்பவர் டைரக்ட் செய்து, 2010ல் ஆஸ்திரேயாவில் வெளியாகி ஏகப்பட்ட திரைப்பட விழாக்களில் அவார்டுகளை வாங்கிய படம்.  
இணையத்திலும் இந்தப் படம் முழுமையாக காணக்கிடைக்கிறது.
அதன் ஆங்கில கதைச்சுருக்கம்
 
"Cockroach is a black, romantic comedy. When Charlie is run over by his own wedding car, he is given another chance at life. Reincarnated as a cockroach he does everything in his power to convince his grieving widow that he has returned. He must woo her back or risk losing her forever!"
 
நீங்களுமா ராஜமௌலி காரு?
 
ஈக்கும் கரப்பான் பூச்சிக்கும் எத்தனை வித்தியாசம்னு பார்க்க விருப்புவர்கள் இங்கே Click செய்யவும். 

நோ சான்ஸ் : மும்பைக்கு மூட்டை முடிச்சுகளை கட்டினார் சிம்ரன்

நோ சான்ஸ் : மும்பைக்கு மூட்டை முடிச்சுகளை கட்டினார் சிம்ரன்
      தமிழில் ‘நேருக்கு நேர்’ படம் மூலம் பிரபலமான சிம்ரன் ‘நட்புக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘ரமணா‘, ‘பிதாமகன்’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார். 2003-ல் தீபக் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அதீப், அதித் என இரு மகன்கள் உள்ளனர்.
சிம்ரன் சினிமாவில் பாப்புலரான நடிகையாக இருந்தபோது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இடம் வாங்கி போட்டார். தற்போது அங்கு தான் பங்களா வீடு கட்டி குடியேறியுள்ளார்.
திருமணத்துக்குப் பின்பு சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவு செய்து வாய்ப்புகளுக்காக காத்து இருந்தார். ஆனால் அவருக்கு படவாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக சுந்தர்.சியுடன் ‘ஐந்தாம் படை’ படத்தில் நடித்தார். கதாநாயகிக்கு இணையான கேரக்டரில் நடிக்க தயார் என்று கூறி கேரக்டருக்காக காத்து இருந்தார். ஆனால் யாரும் அழைக்கவில்லை.
அதனால் சின்னத்திரையில் சில சீரியல்களிலும், சில டிவி ஷோக்களிலும் தலை காட்டினார். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் சின்னத்திரையை நம்பி காலத்தை ஓட்ட முடியும் என்று யோசித்தவர் படங்கள் இல்லாததால் கடந்த சில வாரங்களாக விரக்தியடைந்த நிலையில் இருந்த அவர் சென்னையில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு மும்பையில் குடியேற முடிவு செய்து உள்ளார்.
மும்பையில் உள்ள நாசிக் நெடுஞ்சாலையில் சிம்ரனுக்கு ‘ரிஷிபார்ம்ஸ்’ என்ற பெயரில் 70 ஏக்கர் நிலம் உள்ளது. அங்குபோய் தனது கணவருடன் செட்டிலாகும் முடிவில் இருக்கிறாராம் சிம்ரன்.