Thursday, 4 October 2012

டி.ராஜேந்தருடன் சிவகார்த்திகேயன் கோடம்பாக்கத்தில் அதிரடி அலேக்.!


யேய்ய் டண்டணக்கா… டமுக்குணக்கா என்று குரல் வருகிற திசையெல்லாம்டி.ஆரின் சங்க நாதம்தான் முழங்குறது! அவர் எவ்வளவு சீரியசாக நடித்தாலும், அதை ரசித்து சிரித்து என்ஜாய் பண்ணுகிற கூட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. இதுவரைக்கும் தன் நடிப்பை தானே இயக்கிக் கொண்டிருந்த டி.ஆர் வேறொருவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதே ரசிகர்களுக்கு கடவுள் கொடுத்த பம்பர் பலேக்காதான்!
இதென்ன ஹாட் நியூஸ் என்று கூகுளில் குழி தோண்டுகிற ஆசாமிகளுக்கு இதோ விரிவாக தருகிறோம் அதே நியூசை.
சமீபத்தில் ஒரு புதிய கதையோடு சிவ கார்த்திகேயேனை அணுகினார் ஒரு புது இயக்குனர். கதையை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த சிவ கார்த்திகேயேன் தான் சம்பளமாக கேட்டு வரும் பெரிய பெரிய லட்சங்களை சற்றே குறைத்துக் கொண்டதுடன், கால்ஷீட் தேதிகளையும் கேட்ட நேரத்தில் கொடுக்க முன்வந்தார். அதற்கு பெரிய காரணம் இருந்தது. சிவ கார்த்திகேயனோடு இணைந்து நடிக்கப் போகிறவர் டி.ராஜேந்தர்தான் என்று அந்த புதிய இயக்குனர் சொல்ல, அதற்கு கிடைத்த டிஸ்கவுன்ட்தான் சி.கா வின் இந்த சலுகை.
இந்த கதையில் நடிக்க டி.ஆரும் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதுதான் இந்த செய்தியின் ஸ்பெஷல் திருப்பம்.

No comments:

Post a Comment