Saturday, 29 September 2012

உடல் உறுப்புகளை தானம் செய்தார் நான் ஈ இயக்குனர்


தெலுங்கு திரையுலகில் வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜமௌலி, தனது உடல் உறுப்புக்களை தானம் செய்தார்.
ஈகா ( நான் ஈ ) வெற்றிக்குப் பின்னர் சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார் ராஜமௌலி.

அதாவது ஐதரபாத்தில் உள்ள காந்தி மருத்துவக்கல்லூரிக்கு தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்திருக்கிறார்.

இது குறித்து டுவிட்டரில் ராஜமௌலி, என்னுடைய உடல் உறுப்புகள் நான் இறந்த பின்னர் 8 பேருக்கு வாழ்வு அளிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

அவரது இந்த செயல் தெலுங்குத் திரையுலகில் இப்போது பெரிய விடயமாக பேசப்படுகிறது.

No comments:

Post a Comment