Sunday, 30 September 2012

சோனியா என்னுடன் இணைந்து நடிக்க ‘கிளைமேக்ஸ்’தான் காரணம்… விவேக்

காமெடி நடிகருடன் ஜோடி சேர எல்லா ஹீரோயின்களும் சம்மதிக்க மாட்டார்கள் என்று விவேக் தெரிவித்துள்ளார்.
விவேக்கை நாயகனாக வைத்து ஏபிசி ட்ரீம்ஸ் என்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் பஷீர் குருவண்ணா தயாரிக்கும் படம் பாலக்காட்டு மாதவன். சாந்தி மோகன் எழுதி இயக்கும் இப்படத்தில் சோனியா அகர்வால், செம்மீன் ஷீலா, எம்.எஸ். பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். அஜ்மல் அஜிஸ் இசையமைக்கும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடந்தது.
அந்த விழாவில் விவேக் பேசியதாவது,
என்னைப் போன்ற காமெடி நடிகர்களுடன் தே‌னி‌ குஞ்‌சா‌ரம்‌மா‌, பறவை‌ முனி‌யம்‌மா இல்லை என்றால் பல்லு போன பாட்டிகள் தான் ஜோடியாக நடிப்பார்கள். ஆனால் பாலக்காட்டு மாதவன் படத்தில் முதலில் செம்மீன் ஷீலா நடிக்கிறாங்க என்று சொன்னார்கள். சரி அவுங்க தான் நம்ம ஜோடி என்று நினைத்தேன். அடுத்து சோனியா அகர்வாலும் நடிப்பதாகக் கூறினார்கள். அவர் ஏதோ முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் என்று நினைத்தேன். கடைசியில் பார்த்தால் அவர் தான் எனக்கு ஜோடி என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அவுங்க எனக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக்கிட்டதற்கு கதை மற்றும் படத்தோட கிளைமாக்ஸ் தான் காரணம்.
பொதுவா காமெடி நடிகருடன் ஜோடி சேர எல்லா ஹீரோயின்களும் சம்மதிக்க மாட்டார்கள். இதை தப்பு என்று கூற முடியாது. திரையுலகின் டிரெண்ட் அப்படி. இவற்றையெல்லாம் தாண்டி சோனியா என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம் கதை தான் படத்தோட ஹீரோ. என்னுடன் நடிப்பதில் பெருமை என்று ஷீலா தெரிவித்தார்கள். ஆனால் அவருடன் நடிப்பதில் எனக்குத் தான் பெருமை. தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை செய்தவங்க.
இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்றால் அந்த பட்டியலில் முதலில் இருப்பவர் கே. பாக்யராஜ். அவர் நடித்த அந்த 7 நாட்கள் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் பாலக்காட்டு மாதவன். அந்த பெயரில் நடிப்பதில் எனக்கு பெருமை. அதிலும் அவரும் இப்படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மனதில் உறுதி வேண்டும் படத்தில் இருந்தே எனக்கு எம்.எஸ். பாஸ்கரை நன்கு தெரியும். அவரும், நானும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். அவரும் இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

நான் கவர்ச்சியா நடிக்கக் கூடாதா? விஜயலட்சுமி


கொலிவுட்டில் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை விஜயலட்சுமி.
இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். தற்போதும் வெளியாகவுள்ள வனயுத்தம் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்துள்ளார்.
அடுத்து வர இருப்பது தமிழ் படம் எடுத்த சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம்.
இதில் விஜயலட்சுமி படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், படத்துல எனக்கு நெகட்டிவ் கேரக்டர். எதையும் தூசு மாதிரி பார்க்குற பொண்ணு. எவ்வளவு திமிரா நடிக்க முடியுமோ, அவ்வளவு திமிரா நடிச்சிருக்கேன்.
எத்தனை படத்துலதான் குடும்ப குத்துவிளக்காக நடிச்சிட்டிருக்க முடியும். அதான் கிளாமரா நடிச்சிருக்கேன்.
ஏன் நான் கவர்ச்சியா நடிக்க கூடாதா என்ன? வனயுத்தம் பார்த்துட்டு ரெண்டாவது படம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ஷாக்காத்தான் இருக்கும் என்கிறார்.

கலக்கலான கொமெடி படத்தில் விவேக்-சோனியா அகர்வால் ஜோடி

 கொலிவுட்டில் விரைவில் வெளியாக உள்ள த்ரில்லர் படமான ‘சௌந்தர்யா’வை இயக்கியவர் சந்திரமோகன்.
இவர் தற்போது ஏ.பி.சி.ட்ரீம்ஸ் எண்டர்டெயினர்ஸ் சார்பில் ‘பாலக்காட்டு மாதவன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில் கொலிவுட்டின் நட்சத்திர கொமெடியன் விவேக், நடிகை சோனியா அகர்வாலுடன் இணைந்து நடித்துள்ளார்.
இது குறித்து சந்திரமோகன் கூறுகையில், கதையின் நாயகனாக கலக்கல் கதாபாத்திரத்தில் விவேக் ரசிகர்களை சிரிக்க வைக்கப்போகிறார்.
கதையின் நாயகியாக நடித்துள்ள சோனியா அகர்வாலுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்.
தமிழ் சினிமாவின் திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
அவரின் ஆலோசனையில் படத்தின் திரைக்கதை மேலும் சுவாரஸ்யமாகி வலிமை பெற்றுள்ளது.
மலையாள பட உலகின் பழம்பெரும் நடிகை ‘செம்மீன்’ ஷீலா, இப்படத்தின் கதையை கேட்டு சிரித்து, சிரித்து கண்கலங்கினார் என்றும் மலையாள படங்களுக்கு இசையமைத்த அஜம்ல் அஜீஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்

ஆஸ்திரேலியாவில் உருவான முதல் தமிழ் சினிமா இனியவளே காத்திருப்பேன் – அக் 6-ல் ரிலீஸ்


இனியவளே காத்திருப்பேன் என்ற முழு நீள புதிய படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு, ஆஸ்திரேலியத் தமிழரால் அங்கேயே உருவாக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா என்பதுதான்.
இந்தப் படத்தின் இயக்குநர் பெயர் ஈழன் இளங்கோ. ஈழப் போர்க்களத்தில் இலங்கை படையினரால் நேரடியாக பாதிக்கப்பட்டு சின்ன வயதிலேயே குடும்பத்துடன் இந்தியா வந்து பின் ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர்.
இளங்கோவுடன் ஒரு நேர்காணல்…
கேள்வி: சினிமா ஆர்வம் எப்படி?
ஈழப் போரில் எல்லா தமிழ்க் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பமும் சொல்லொணாத துயரங்களைச் சந்தித்தது. எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு கட்டிய துணியோடு தமிழகம் வந்தோம்.
டபுவந்தாரை, வந்தாரை மட்டும் வாழ வைக்கும் தமிழகம் எங்களையும் வாழ வைத்தது! அங்கு பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் மாநிலக்கல்லூரியில் புள்ளியியல் பட்டப்படிப்பு முடித்தேன். சென்னையில் பல திரைப்பிரபலங்களின் தொடர்பு இருந்தாலும்; எனக்கு திரைத்துறையில் அவ்வளவு நாட்டம் இருந்தது இல்லை.
பின் 1999 ல் நியூசிலாந்து சென்றடைந்தேன். வாழும் நாடு சொர்க்கமாகவே இருந்தாலும் தாய் மண்ணின் இழப்பு மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஈழம் தொடர்பான பல நிகழ்வுகளில் மேடையேறியது பல தமிழ் உள்ளங்களில் என்னை இடம் பிடிக்க வைத்தது. தாய் மண்ணுக்காக என்னால் போராட முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி வருத்திக் கொண்டே இருந்தது. என்னால் என்ன செய்ய முடியும்? நான் என்ன செய்ய வேண்டும்? என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.
ஒவ்வொரு தனிமனிதனுடைய வெற்றியும் அந்த இனத்திற்கு கிடைக்கும் வெற்றி என்பதை புரிந்துகொண்டேன். ஈழத் தமிழனாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் தேர்ந்தெடுத்தது திரைப்படத்துறை. படிப்பில் ஒலிப்பதிவு, இயக்கம், தொகுப்பு சம்மந்தமான பாடங்களை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு பயிற்சிப் பெற்றேன்.
பின் இந்தியா சென்று திரைப்பட தாயாரிப்பாளர் பாலுமகேந்திரா அவர்களை சந்தித்து அவருடைய அறிவுரை பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் பின் ஒளிப்பதிவாளர் கைமல் அவர்கள் பல நுட்பங்களை அறிவுறுத்தினார். இவர்களுக்கு நான் மிகவும் கடமைபட்டுள்ளேன்.
2003 ம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்து சிகரம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணி புரிந்தேன். அச்சமயம் ஈழத்து மூத்த கலைஞர் யு ரகுநாதன் ஐயா அவர்களின் தொடர்பு நண்பர் கருணாகரன் மூலமாக கிடைத்தது. அதிலிருந்து உருவாகியது தான் “இனியவளே காத்திருப்பேன்”. சென்னையில் இசையமைப்பாளர் கவி என்னுடைய நெருங்கிய நண்பா. அவர் இசையமைத்த “அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை” என்ற பாடல் நம் மனதை உருக்கும் பாடல்களில் ஒன்று என்பதை நாம் யாவரும் மறந்து விட முடியாது. கவி இசையமைத்த இரண்டு பாடல்கள் எமது படத்தில் அமைந்தது எமது சிறப்பு.
கேள்வி: இந்திய திரைப்படத்துறை அசுர வளர்ச்சி அடைந்து நிற்கும் இக்காலத்தில் ஈழத் தமிழராகிய நாம் அவர்களுக்கு இணையாக வளர்ச்சியடைய முடியுமா? முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
முதலில் இந்த கேள்வியை என்னிடம் கேட்டதற்கு நன்றி. எனது பதில் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, அவ்வாறு அமைந்தால் என்னை தயவுசெய்து மன்னிக்கவும். உதாரணமாக, 1980 முடிவுவரை உலகிலேயே இலங்கை வானொலி தலைசிறந்த வானொலியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்திய தமிழர்கள் கூட விரும்பிக் கேட்கும் வானொலியாக இலங்கை வானொலி இருந்தது என்பதை கவிஞர் வைரமுத்துக் கூட குறிப்பிட்டு இருந்ததை நான் இங்கு கூற விரும்புகிறேன். ஆனால் இன்று இந்திய வானொலிகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. நம் மண்ணில் எமக்கு எதிராக நடந்த இனக் கலவரம் எமது வளர்ச்சியை குன்றச்செய்தது.
அதேபோல் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டோமேயானால் நாம் இந்திய திரைப்படங்களை ரசித்து வந்த போதிலும் எமக்கென்று தளம் அமைப்பதற்காக கலைஞர்கள் யு ரகுநாதன், ஏ ளு துரைராஜா, காவலூர் ராஜதுரை போன்றவர்கள் 70 களில் சில படைப்புகளை படைத்தார்கள். அந்த முயற்சி இனக் கலவரத்தின் காரணமாக முயற்சியோடு முடக்கப்பட்டுவிட்டது.
ஈழத் தமிழ் கலைஞர்கள் இலங்கை அரசின் அடக்குமுறையால் அடக்கப்பட்டு விட்டார்கள். எமது கலை வளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். அதன் பின் எமது உயிரை காப்பாற்றவேண்டும், எமது இனத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஈழத்தமிழர்களின் நெஞ்கங்களில் மேலோங்கியிருந்தது. அதன் பின் எமது இனத்தைக் காக்கும் போராட்டத்தில் மட்டுமே எமது பங்களிப்பு அமைய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இத்தருணத்தில் நாம் முழுக்க முழுக்க இந்திய படைப்புகளுக்கே அடிமையாகி விட்டோம் என்றே கூறவேண்டும. இதனால்தான் இன்று எமது கலைப்பயணத்தை வளர்க்க முற்படும்போது நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து தொடர்வதற்கு நாம் சற்று பின்நோக்கியே சென்று துவங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த வளர்ச்சியின் இடைவெளியை நாம் நிரப்ப சில காலம் ஆகலாம். ஆனால் நிச்சயம் கூடிய விரைவில் எமக்கென்று ஒரு தளம் அமைத்து சிறந்த படைப்பாளிகளாக நாம் மாறுவோம் என்பதில் எமக்கு எந்த ஐயமும் இல்லை. தொடக்கம் என்ற ஒன்று இருந்தால் தான் வளர்ச்சி என்ற வார்த்தைக்கே இடமிருக்கும். இதற்காக அவுஸ்திரேலிய வாழ் தமிழர்களுடைய முதற் படைப்பு தான் “இனியவளே காத்திருப்பேன்”.
வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே பல கனவுகள் இருந்தபோதிலும் எமது கவனம் எமது போராட்டத்தை மையமாக வைத்து மட்டுமே இருந்தது. திரைப்படத்துறையில் ஆர்வம் இருந்த சிலரும் கூட எமக்கு ஒரு தளம் அமைக்க வேண்டும் என்று கருதாது இந்திய படைப்புகளுக்கு தயாரிப்பாளர்களாக மட்டுமே ஆனார்கள். ஒரு படைப்பின் தரத்தை இரண்டாகப் பிரிக்கலாம், ஒன்று கலைநுட்பம், இதற்கு படைப்பாளியே முக்கிய பங்கு வகிக்கின்றான். இன்னொன்று தொழில்நுட்பம். இதற்கு பொருளாதாரமே முக்கிய பங்கை வகிக்கின்றது. அதிக பணம் செலவு செய்து தயாரித்து அதை மீட்கும் நிலையில் எமது தளம் இன்று இல்லை.
திரைப்படத்துறை தொழில்நுட்பக் கலைஞர்களும் எமது இனத்தில் மிக குறைந்தவர்கள் என்றே கூறலாம். ஆனால் இதை நினைத்து இப்படியே இருந்துவிட்டோமேயானால் எப்போதுமே இப்படியே இருந்துவிட வேண்டியதுதான். படைப்பாளிகள் உருவாகின்றார்கள். தொழில்நுட்பவாதிகள் தாமாகவே உருவாக்கிக்கொள்கிறார்கள். மக்களால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு, மக்களின் ஆதரவை அடையும் கலைஞர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஒரு படைப்பின் வெற்றியையும் ஒரு கலைஞனின் வெற்றியையும் மக்களே நிர்ணயிக்கின்றார்கள் என்று கூட கூறலாம். ஒரு படைப்பாளியை. ஒரு கலைஞனை வாழும் போது அடையாளம் கண்டு ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வெற்றி இனத்தின் வெற்றியாகவே மாறுகின்றது. ஒரு மனிதனுடைய வளர்ச்சியின் பெருமை அந்த இனத்திற்கும் பெருமை தரும் என்ற எண்ணம் இன மக்களிடம் நிச்சயம் வேண்டும். ஆதரவும் அரவணைப்பும் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தாக அமையும்.
கேள்வி: “இனியவளே காத்திருப்பேன்” உருவாக்கிய அனுபவம்?
திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு மாயையாகவே, சாமான்ய மக்களின் எட்டாக் கனவாகவே இருந்து வந்திருக்கின்றது. நாமும் அப்படியே நினைத்திருந்தோம். திரைப்படத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆசை இருந்த எமக்கு தயாரிப்பாளருக்காக காத்திருந்ததில் இது ஒரு நிறைவேறாத கனவாகவே ஆகிவிடும் என்ற ஐயம் இருந்தது. ஆகவே எம்மிடம் கைவசம் இருந்த தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பவாதிகளையும் வைத்துக்கொண்டு கலைஞர்களை தேடும் முயற்சியில் இறங்கினோம். அதில் எதிர்பாராத நடைமுறை சிக்கல்களை சந்திக்கவேண்டியிருந்தது.
சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் திரைப்படத்துறையை கலை கண்ணோட்டத்தோடு அனுகுபவர்கள் எமது சமுதாயத்தில் மிகச் சிலரே என்று புரிந்தது. இருந்த போதிலும் நட்புக்காக நடிப்பதற்கு சிலர் முன் வந்தனர். இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு திரைத்துறை அனுபவம் இல்லை என்றே கூறலாம். இத்தருணத்தில் எனக்கு ஊக்குவிப்பை தந்து அனுபவத்தை பரிமாறிக்கொண்டு என்னை மனம் தளராமல் வழிநடத்திச்சென்றவர் ரகுநாதன் ஐயா அவர்கள். எழுபது வயதை தாண்டி ஐம்பது வருட திரையுலக அனுபவம் கொண்ட அவர் பிரான்சில் இருந்து “இனியவளே காத்திருப்பேனுக்காக” இங்கு வந்து அதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்து, பங்களிப்பை தந்தது மட்டுமல்லாது எமக்கு வழிகாட்டியாகவும் அமைந்தது எமக்கு கிடைத்த பெரும் பேறு.
இவரோடு நாச்சிமார் கோயிலடி வில்லுப்பாட்டுக் கலைஞர் ராஜன் தம்பையா அவர்கள் ஜெர்மனியில் இருந்து வந்து ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்தது எமக்குப் பெருமை. திரைப்பட தொகுப்பை முடித்துக்கொண்டு சென்னை சென்று திரைப்பட இசையமைப்பாளர் உதயன் அவர்களை பின்னணி இசைக்காக நாடினோம். அவருடைய பின்னணி இசை திரைப்படத்திற்கு மெருகூட்டியது. இறுதியில் நாம் பட்ட கஷ்டங்களின் பயன் “இனியவளே காத்திருப்பேன்” ஒரு தரமான படைப்பாக உருவாகி இன்று திரையில் வெளிவரும் தருணத்தை அடைந்திருக்கின்றது.
கேள்வி: உங்கள் திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புகள் ஏதாவது உள்ளதா?
முக்கியமாக துப்பாக்கி கத்தி ரத்தம் குத்து சண்டை இல்லாத ஈழத்தமிழர்களுடைய முதலாவது படம் என்று பார்த்தவர்கள் கூறினார்கள். இரட்டை வேட காட்சி மற்றும் ஒருவர் பலராக தோன்றும் காட்சிகள் அமைந்துள்ளது. மக்களுடைய ஆதரவு இத் திரைப்படத்தின் முழு வெற்றிக்கு காரணமாக மட்டும் இல்லாமல் இனி வரும் படைப்புகளுக்கு தூண்டுகோலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. “இனியவளே காத்திருப்பேன்” ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களின் கலையுலக சாதனையில் இன்னுமொரு மைல்கல்.
-இவ்வாறு அவர் கூறினார்.

நள்ளிரவில் சல்லு மட்டும் அல்ல வேறு சிலரும் ..!இழுக்கும் பிரியங்கா..!


சல்மான் கான் வீட்டுக்கு நள்ளிரவில் போனது பற்றி விளக்கம் அளித்தார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் ஹீரோ சல்மான் கானுடன் அதிகாலை 4 மணிக்கு அவரது வீட்டிலிருந்து பிரியங்கா சோப்ரா வெளியேறிய புகைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி இருவரும் கருத்து சொல்லாமல் மவுனம் காத்தனர். இதையடுத்து இருவர் பற்றியும் கிசுகிசு வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது மவுனத்தை கலைத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சல்மான் கானின் தங்கை அர்பிதாவும் நானும் கடந்த 7 வருடமாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம்.
அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்படி செல்லும்போதுதான் யாரோ எங்களை போட்டோ எடுத்திருக்கிறார்கள். இந்த போட்டோவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை கையாண்டு திருத்தம் செய்திருக்கிறார்கள். குறிப்பிட்ட புகைப்படம் எடுத்தபோது என்னுடன் சல்மான் அவரது குடும்பத்தினர் சுஹேல், அர்பாஸ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
அதை தந்திரமாக அழித்து மறைத்திருக்கிறார்கள். இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட போட்டோவைத்தான் நாங்கள் இருவர் மட்டும் இருப்பதுபோல் பரப்பி வருகிறார்கள். நானும் சல்மானும் நள்ளிரவில் வீட்டில் இருந்தபோது, அவர்கள் அனைவரும் எங்களுடன் இருந்தார்கள். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.

இன்றைய கோடம்பாக்கம் கிசு கிசு ..!


* கோலிவுட் நமீதாவுக்கு போட்டியாக மல்லுவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார் நமீதா பிரமோத். ‘டிராபிக் என்ற படத்தில் அறிமுகமான இவர் தற்போது சத்யன் அந்திக்காடு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இவர் தனது பெயரை மாற்றிக்கொள்ளப்போவதில்லையாம்.
* ஸ்ரேயா நடிக்கும் ‘சந்திரா பட ஷூட்டிங் நியூயார்க்கில் நடந்தது.
* தமன்னாவுடன் அடிக்கடி பேஸ்புக்கில் பேசும் அனுஷ்காவுக்கு காஜல் அகர்வாலின் அழகும், நயன்தாராவின் துணிச்சலும் பிடிக்குமாம்.
* ‘கடல் படத்துக்காக ராதா மகள் துளசி 12 கிலோ உடல் எடையை குறைத்தாராம்.
* ‘காதல் சந்தியா மலையாளத்தில் ‘மை டியர் மம்மி படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். அவருடன் கல்லூரிக்கு செல்லும் அம்மாவாக வேடமேற்கிறார் ஊர்வசி.

படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் 3 ஆண்டாக தவித்த தயாரிப்பாளர்..!


நான்கு மொழிகளில் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரூ. 1 கோடி பணம் பற்றாக்குறையால் 3 ஆண்டாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தார். ‘அஜந்தாÕ என்ற படத்தை தயாரித்திருப்பவர் ராஜ்பா ரவிசங்கர். திருமால் என்பவருடன் இணைந்து இப்படத்தை இயக்கினார்.
இதுபற்றி ராஜ்பா ரவிசங்கர் கூறியதாவது:
நல்ல படம் தயாரிக்கும் ஆசையில் ரூ.15 கோடியுடன் திரையுலகுக்கு வந்தேன். பார்வையற்ற ஒரு பெண்ணுக்கும், பாடகர் ஒருவருக்கும் இடையே மலரும் காதலைபற்றி கதை அம்சத்துடன் கொண்ட இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் தயாரித்தேன்.
ரமணா, சாய் கிரண், வந்தனா குப்தா நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்தார். 2009ம் ஆண்டு படத்தை தொடங்கி முடித்தேன்.
அதற்குள் கையிலிருந்த பணம் கரைந்துவிட்டதால் ரிலீஸ் உள்ளிட்ட வேலைகளுக்கு ரூ. 1 கோடி தேவைப்பட்டது. அதை புரட்ட முடியாமல் தவித்தேன். அதற்குள் 3 ஆண்டுகள் கடந்துவிட்டது.
இப்போது ரிலீஸுக்கு தயாராகிவிட்டேன். ரிலீஸின்போது புதுமை செய்ய உள்ளேன். இப்படத்தின் டிரைலர் விளம்பர கட்டிங் கொண்டுவருபவர்களுக்கு முதல் ஷோ டிக்கெட் 20 ரூபாய்க்கு தர உள்ளோம். அதேபோல் ரிலீஸ் விளம்பர கட்டிங் 3 கொண்டு வருபவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு 10 ரூபாய்க்கு டிக்கெட் தர உள்ளோம்.

மம்மூட்டி ஜோடி..!கைவிரித்த வித்யாபாலன்..!


மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார் வித்யா பாலன். தமிழில் ஸ்ரீகாந்த் ஜோடியாக ‘மனசெல்லாம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் வித்யா பாலன். 50 சதவீத ஷூட்டிங் முடிந்த நிலையில் இயக்குனருக்கும் வித்யா பாலனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அப்படத்திலிருந்து வித்யா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக த்ரிஷா நடித்தார். இதையடுத்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்திய வித்யா பாலன் சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமான ‘தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தார். இப்படத்துக்கு பிறகு அவரை தமிழில் நடிக்க சில இயக்குனர்கள் அணுகியபோது நடிக்க மறுத்துவிட்டார்.
ஆனால் சந்தோஷ் சிவன் மலையாளத்தில் இயக்கிய உருமி படத் தில் அவர் நடித்தார். இந்நிலையில் மலையாளத்தில் மம்மூட்டி ஹீரோ வாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலனை நடிக்க கேட்டார் இயக்குனர் சலீம் அகமத்.
ஆனால் இந்தி படங்களில் பிஸியாக இருப்பதால் மம்மூட்டி ஜோடியாக நடிக்க அவகாசம் இல்லை என்று கைவிரித்து விட்டார். இதேபோல் அமல் நீராட் இயக்கும் நட்சத்திரம் மலையாள படத்திலும் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை வித்யாபாலன் மறுத்திருக்கிறார்.

டர்டி நாயகியை மிரள வைக்கும் ‘மியாவ் மியாவ்’ ‘..!


கவர்ச்சி காட்டவே பயப்படாதவர் வித்யா பாலன். அதேபோல எப்பவும் தைரியமாகவும், தில்லாகவும் இருப்பவர். ஆனால் அப்படியாப்பட்ட அவருக்கு ஒரே ஒரு ‘மேட்டர்’ மட்டும் பிடிக்கவே பிடிக்காதாம்.. அந்தப் பெயரைக் கேட்டாலே பயந்து போய் விடுவாராம்.. அவர்தான் பூணையார்.
பூணைகள் என்றால் வித்யாவுக்கு செம அலர்ஜியாம். பூணை என்ர பெயரைக் கேட்டாலே அவருக்கு டென்ஷனாகி விடுமாம். அதேபோல எங்காவது பூணையைப் பார்த்து விட்டால் போதும், ஓடி ஒளிந்து விடுவாராம். பூணையைப் பற்றியாராவது பேசினால் கூட ஸ்டாப் ஸ்டாப் என்று கத்தி விடுவாராம்.
ஒருமுறை இப்படித்தான், கமலிஸ்தான் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்புக்காக வந்திருந்தார் வித்யா. அப்போது கேரவன் வேனுக்குள் சாப்பாட்டுக்காக போயிருந்த வித்யா சாப்பாட்டை முடித்து விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு சில பூணைகள் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போய் அங்கிருந்த சேர் ஒன்றில் ஏறி நின்று விட்டாராம். பூணைகளை இங்கிருந்து விரட்டினால்தான் நான் இறங்குவேன் என்று பீதியுடன் அவர் கூறவே வேறு வழியில்லாமல், சிலர் சேர்ந்து பூணைகளைப் பிடித்து வேறு பக்கம் கொண்டு போய் விட்டனராம். அதன் பிறகுதான் சேரை விட்டு இறங்கினாராம் வித்யா. இருப்பினும் டென்ஷனில் வியர்த்துக் கொட்டியதால் மறுபடியும் கேரவனுக்குள் ஓடிப் போய் விட்டாராம்.
ஏன் இப்படி பூணையைக் கண்டால் எலி போல ஓடுகிறார் வித்யா… யாராச்சும் பிஎச்டி பண்ணி கண்டுபிடிங்கப்பா….!