நான்கு மொழிகளில் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரூ. 1 கோடி பணம் பற்றாக்குறையால் 3 ஆண்டாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தார். ‘அஜந்தாÕ என்ற படத்தை தயாரித்திருப்பவர் ராஜ்பா ரவிசங்கர். திருமால் என்பவருடன் இணைந்து இப்படத்தை இயக்கினார்.
இதுபற்றி ராஜ்பா ரவிசங்கர் கூறியதாவது:
நல்ல படம் தயாரிக்கும் ஆசையில் ரூ.15 கோடியுடன் திரையுலகுக்கு வந்தேன். பார்வையற்ற ஒரு பெண்ணுக்கும், பாடகர் ஒருவருக்கும் இடையே மலரும் காதலைபற்றி கதை அம்சத்துடன் கொண்ட இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் தயாரித்தேன்.
ரமணா, சாய் கிரண், வந்தனா குப்தா நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்தார். 2009ம் ஆண்டு படத்தை தொடங்கி முடித்தேன்.
அதற்குள் கையிலிருந்த பணம் கரைந்துவிட்டதால் ரிலீஸ் உள்ளிட்ட வேலைகளுக்கு ரூ. 1 கோடி தேவைப்பட்டது. அதை புரட்ட முடியாமல் தவித்தேன். அதற்குள் 3 ஆண்டுகள் கடந்துவிட்டது.
இப்போது ரிலீஸுக்கு தயாராகிவிட்டேன். ரிலீஸின்போது புதுமை செய்ய உள்ளேன். இப்படத்தின் டிரைலர் விளம்பர கட்டிங் கொண்டுவருபவர்களுக்கு முதல் ஷோ டிக்கெட் 20 ரூபாய்க்கு தர உள்ளோம். அதேபோல் ரிலீஸ் விளம்பர கட்டிங் 3 கொண்டு வருபவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு 10 ரூபாய்க்கு டிக்கெட் தர உள்ளோம்.
No comments:
Post a Comment