Tuesday, 28 August 2012

பயணிகள் ஆடை விடயத்தில் விமான ஊழியர்களின் தலையீடு: பெரும் சர்ச்சை

பயணிகள் ஆடை குறித்து விமான ஊழியர்கள் பிரச்னை கிளப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் மாடர்னாக டிரஸ் போட்டிருந்தார். அவரிடம் விமான ஊழியர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இன்னொரு அமெரிக்க விமானத்தில் பெண் அணிந்திருந்த டி ஷர்ட்டில் 4 எழுத்து வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது. அது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்று ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடைசியில் சால்வை போர்த்திக் கொண்டு விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தங்கள் அனுபவம் குறித்து இணையத்தில் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இது இப்போது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. ஆடை விடயத்தில் விமான நிறுவனங்கள் தலையிடுவதற்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மிக மிக குட்டை பாவாடை, மற்றவர்களை கவரும் வகையில் டி ஷர்ட் போட்டுக் கொண்டு விமானத்தில் பயணம் செய்யலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு எந்த விதிமுறையும் இல்லை.
இதுவரை எந்த விமான நிறுவனமும் டிரஸ் கோட் எதையும் வெளியிடவில்லை. இதுகுறித்து விமான நிறுவனங்களின் வக்கீல் கென்னத் கூறுகையில், குடும்பத்தினர் வந்து செல்லும் ரெஸ்டாரன்டில் ஆபாசமாக உடை அணிந்து வருபவர்களை வெளியில் செல்லும்படி அன்பாக கேட்டுக் கொள்ளுங்கள்.
விமான நிறுவனங்களும், அவர்களுடைய விமானங்களும் தனியார் சொத்து என்பதால் என்ன மாதிரியான டிரஸ் அணிந்து வரவேண்டும் என்று விமான ஊழியர்கள் சொல்ல முடியும் என்கிறார்.

No comments:

Post a Comment