இந்த வேதனையை சொல்வதற்கு முன், பழைய ரெக்கார்டுகளை புரட்டியாகவேண்டும். முப்பத்தைந்து கோடி பட்ஜெட்டுடன் தயாரான கதைதான் மூகமூடி. இந்த கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னார் மிஷ்கின். இந்த படத்தை லிங்குசாமி தயாரிப்பதாகவும் முடிவானது. ‘நெருஞ்சி முள்ளை எடுத்து காது குடையணுமா’ என்று சிலர் லிங்குசாமியை குழப்ப, அவரும் ஒரு நல்ல நாளில் கை கொடுத்து அனுப்பிவிட்டார் மிஷ்கினை.
நாலே சந்திப்புகளில் நாற்பது வருஷ பேச்சை காதுக்குள் திணித்த மிஷ்கினை கண்டாலே ஜுரம் வர ஆரம்பித்தது சூர்யாவுக்கு. இந்த நல்ல சந்தர்பத்தை பயன்படுத்தி அவரும் விலகிக் கொள்ள, அதன்பின் சிம்புவிடம் இதே கதையை சொன்னார் மிஷ்கின்.
‘ஒரே டப்பாவுல ரெண்டு தேளு? இன்ட்ரஸ்ட்டிங்…’ என்று அதையும் விமர்சித்தது அறிவாளிகள் வட்டாரம். நல்லவேளை, தமிழன் செய்த பூர்வஜென்ம புண்ணியம். இந்த கூட்டணி ஆரம்பத்திலேயே புட்டுக் கொள்ள, அப்புறம் கிடைத்தவர்தான் ஜீவா.
சூர்யாவில் ஆரம்பித்து ஜீவாவில் முடிந்த தனது முகமூடி எபிசோடின் வீழ்ச்சிக்கு பெரிய காரணம் லிங்குசாமிதான் என்று நினைத்துவிட்டார் மிஷ்கின்.
அந்த ஆத்திரத்தில் வில்லன் நரேனுக்கு ‘அங்குசாமி’ என்று பெயர் வைத்துவிட்டார்.அதுமட்டுமல்ல, ‘உங்க பிரதர்ஸ் உங்க பிரதர்ஸ்’ என்று டயலாக்கிலும் அவர் மீது வெறுப்பை கொட்டினார். (இது லிங்குவின் திருப்பதி பிரதர்ஸ் கம்பெனி) சூர்யாவையும் விட முடியாமல் ஒரு கேரக்டரை பேரழகன் சூர்யா போலாக்கி படத்தில் நடமாட வைத்துவிட்டார்.
ஆரம்பத்தில் இதை சீரியசாக எடுத்துக் கொள்ளாத லிங்குசாமி வட்டாரம், பிறகு போனிலேயே சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி வேதனைப்பட்டதாம்.
No comments:
Post a Comment