Monday, 10 September 2012

பின்லேடன் படுகொலையில் நடந்தது என்ன? புதிய தகவல்கள் அம்பலம்!

பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வேட்டையில் ஈடுபட்ட வீரர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளது.
அதிலிருந்து தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஒசாமா பின்லேடனை கொல்ல அதிபர் ஒபாமாவும், ஆலோசகர்களும் பல்வேறு திட்டங்கள் குறித்து தீவிரமாக ஆலோசித்தனர். விமானம் மூலம் சென்று குண்டுகள் வீசி வீட்டை தகர்த்து பின்லேடனை கொல்வது என்று முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு ராணுவ மந்திரி உள்பட பலர் ஆதரித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment