Friday, 31 August 2012

5 மனைவிகளுடன் தொடர்ச்சியாக உறவு.. மூச்சுமுட்டி இறந்த ஆப்பிரிக்கர்!

 African Man Raped Death 5 Jealou Wives நைஜீரியா: ஆப்பிரிக்காவில் தங்களது கணவன் ஆறாவது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்ட 5 மனைவிகள் தங்களுடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்தினர். தொடர்ச்சியாக முதல் 4 பேருடன் உல்லாசமாக இருந்துவிட்டு 5வது மனைவியிடம் சென்ற அந்த நபர் மூச்சுமுட்டி மரணம் அடைந்தார்.
ஆப்பிரிக்காவில் உள்ள ஒக்பாடிபோவைச் சேர்ந்த வசதி படைத்த தொழில் அதிபர் உரோகோ ஒனோஜா. அவருக்கு 6 மனைவிகள். கடந்த செவ்வாய்கிழமை அவர் பாரில் மது அருந்திவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நேராக 6வது மனைவியின் அறைக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைப் பார்த்து பொறாமைப்பட்ட மற்ற 5 மனைவிகள் அந்த அறைக்குள் புகுந்து கத்தி மற்றும் கம்பை காட்டி தங்களுடனும் உல்லாசமாக இருக்க வருமாறு மிரட்டி அழைத்தனர்.
ஒனோஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்தும் முடியவில்லை. இதையடுத்து ஒவ்வொரு மனைவியுடனும் உல்லாசமாக இருந்துள்ளார். அதுவும் தொடர்ச்சியாக. முதல் 4 மனைவிகளை திருப்திபடுத்திவிட்டு 5வது மனைவியிடம் சென்றுள்ளார். ஏற்கனவே தொடர்ச்சியாக 4 பேருடன் உறவு வைத்ததால் கலைத்துப் போன அவர் 5வது மனைவியிடம் சென்றதும் மூச்சுமுட்டி இறந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பெண்களை கைது செய்துள்ளனர். ஒனோஜா இறந்தவுடன் அவரது முதல் 5 மனைவிகளும் காட்டுக்குள் ஓடிவிட்டதாக 6வது மனைவி தெரிவித்தார்.

இந்த ஐந்து பெண்களும் செய்த காரியத்தைப் பாருங்களேன்...

 Mother 4 Girls Have 13 Boob Ops She Wants For Daughter உலகிலேயே இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை செய்து முடித்த ஒரே குடும்பம் இதுவாகத்தான் இருக்க முடியும். விஷயம் வேறொன்றுமில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த சாண்டல் மார்ஷல் என்பவரும், அவரது நான்கு மகள்களும் இதுவரை தங்களது மார்பகங்களை பெரிதாக்குவதற்காக 13 முறை ஆபரேஷன் செய்துள்ளனராம். தற்போது தங்களது ஐந்தாவது மகளது மார்பகத்தையும் பெரிதாக்க ஆபரேஷன் செய்யப் போகிறார்களாம்.
கேட்கவே வினோதமாக இருக்கிறதல்லவா.. தொடர்ந்து படியுங்கள் இன்னும் களேபரமாக இருக்கும்...
லண்டனைச் சேர்ந்தவர் சாண்டல் மார்ஷல். இவருக்கு 53 வயதாகிறது. இவரது மகள்கள் 30 வயது எம்மா, 21 வயது ரிப்ளி, 27 வயது டெர்ரி, 26 வயது தாரா.
இந்த ஐந்து பேரும் தங்களது மார்பகங்களை யூனிபார்மாக பெரிதாக்கியுள்ளனர். இதற்காக இதுவரை ஐந்து பேரும் சேர்ந்து மொத்தம் 13 முறை ஆபரேஷன் செய்துள்ளனராம்.
இந்த ஐந்து பேரில் தற்போதைக்கு பெரிய மார்பகத்துடன் வலம் வருபவர்கள் டெர்ரியும், தாராவும்தான். இவர்களில் டெர்ரிக்கு 3 முறை மார்பகத்தைப் பெருக்க ஆபரேஷன் செய்துள்ளனர். தாராவுக்கு 2 வாட்டி செய்துள்ளனர்.
அம்மா சாண்டலுக்கு மொத்தம் 4 முறை ஆபரேஷன் செய்துள்ளனராம். எம்மாவுக்கு 3 முறையும், ரிப்ளிக்கு ஒருமுறையும் ஆபரேஷன் செய்துள்ளனர். இந்த ஐந்து பேருக்கும் 13 முறை ஆபரேஷன் செய்ததன் மூலம் மொத்தம் 3 லிட்டர் சிலிகானை மார்பகத்தில் சேர்த்துப் பெரிதாக்கியுள்ளனராம்.
இங்கிலாந்திலேயே அதிக அளவில் மார்பகப் பெருக்க ஆபரேஷன் செய்த குடும்பம் இதுதானாம். ஐந்து பேரும் தெருவில் இறங்கி நடந்தால் அத்தனை பேரின் பார்வையும் இவர்களின் மார்பகங்கள் மீதுதான் விழுமாம். அவ்வளவு பெரிதாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் 14 வயதாகும் தனது கடைசி மகள் பிரிட்னிக்கும் ஆபரேஷன் செய்து மார்பகத்தை பெரிதாக்கத் திட்டமிட்டுள்ளாராம் அம்மா சாண்டல். பிரிட்னி பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். வழக்கமான சைசில்தான் அவருக்கு தற்போது மார்பகம் உள்ளது. ஆனால் தங்களுக்கு ஈக்வலாக பிரிட்னியின் மார்பகத்தையும் மாற்றி விட அம்மா முடிவெடுத்துள்ளாராம். பிரிட்னியும் அதற்கு ஓ.கே சொல்லி விட்டாராம். இருப்பினும் 18 வயதில்தான் இந்த ஆபரேஷனை செய்வது சரியாக இருக்கும் என்பதால் அதுவரை வழக்கமான சைசிலேயே உலா வருவாராம் பிரிட்னி.
இதுகுறித்து அம்மா சாண்டல் கூறுகையில், எனது மகள்களுக்கும், எனக்கும் பெரிய மார்பகங்கள் இருப்பதைப் பார்க்கவே பெருமையாக, சந்தோஷமாக இருக்கிறது. இதை நாங்கள் விரும்புகிறோம். விரைவில் பிரிட்னியும் தனது சகோதரிகளைப் போலவே பெரிய மார்பகத்துக்கு மாறி விடுவாள்.
மார்பகங்களைப் பெரிதாக்கி இருப்பதால் நாங்கள் ஐந்து பேருமே கவர்ச்சிகரமாக காட்சி அளிக்கிறோம். மேலும் எங்களுக்கு ஒரே மாதிரியாக மார்பகங்கள் இருப்பதும் தமாஷாக இருக்கிறது.
அதை விட காமெடி என்னவென்றால், என்னைப் பார்த்து நீங்க யாரு இவங்களுக்கு தங்கச்சியா என்று எனது மகள்களைக் காட்டி சிலர் கேட்பார்கள். எனக்கு வெட்கமாகப் போய் விடும் என்று கூறி கலகலவென சிரிக்கிறார்.

Tuesday, 28 August 2012

vijay with jackie chan

mallika sherawat hot






தனக்கு செக் வைத்த “தளபதி” யை வீழ்த்த “தல” க்கு தூது அனுப்பிய கௌதம்


‘நீதானே என் பொன் வசந்தம்’ முடிந்தவுடன், ஏ.ஆர்.ரகுமான் இசையில், விஜயை வைத்து கவுதம் இயக்குவதாக இருந்த ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் நிரந்தரமாகக் கைவிடப்பட்டது’ என்று கவுதம் வாசுதேவ மேனனே அறிவித்தார்.
தனது ‘துப்பாக்கி’ படப்பிடிப்பு முற்றுப்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கவுதமிடம் ஒன்லைனாக மட்டுமே கேட்டிருந்த ‘யோஹனின் முழுக்கதையையும் சொல்லச்சொல்லி, விஜய் பலமுறை தகவல் அனுப்பியும் கவுதம் கண்டுகொள்ளாமல் இருந்தாராம்.
‘ஏன் முழுக்கதையையும் கேக்காம நடிக்கமாட்டாரா? முருகதாஸ் முழுக்கதையும் சொல்லியா ‘துப்பாக்கி’ ஷூட்டிங் போனாங்க? என்பது கவுதம் தரப்பு கேள்வி.
இதை ஒட்டி, இருதரப்புக்கும் இடையே, ஒரு மந்தமான மவுனம் நிலவிய நிலையில், திருட்டு டி.விடி. புகழ் ஏ.எல் .விஜயின் ஒரு கதையை ஓ.கே. செய்து, கவுதமுக்கு செக்மேட் வைத்தார் விஜய்.
விஜயின் இந்த போங்கு ஆட்டத்தை சற்றும் எதிர்பாராத கவுதம் நேற்று தனது ட்விட்டரில், காரணம் எதையும் சொல்லாமல், ‘ விஜயை வைத்து நான் இயக்குவதாக இருந்த ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ ஒரு அத்தியாயம் கூட துவங்கப்படாமல் முடிவுக்கு வந்தது’ என்று அறிவித்தார்.
பல மாதங்களுக்கு முன்பு, இதே போன்ற ஒரு கசப்பான சம்பவத்தை அஜீத்துடனும் சந்தித்தித்திருந்த கவுதம், தற்போது விஜய்க்காக தயார் செய்து வைத்திருந்த ‘யோஹன்’ கதையை அஜீத்தை வைத்து இயக்க தூது அனுப்பி இருப்பதாக, இருதரப்பிலிருந்தும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய கோடம்பாக்கம் கிசு கிசு..!


* இந்தியில் சல்மான்கான், கேத்ரினா கைப் நடித்த ‘ஏக் தா டைகர் பட ரீமேக்கில் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்க பேச்சு நடக்கிறது.
* ‘அறிந்தும் அறியாமலும் பட ஹீரோ நவ்தீப், டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆருக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.
* மலையாள நடிகர் ஜெயராம் மனைவி, குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை சென்னையில் கொண்டாடுகிறாராம்.
* ஹாலிவுட் ஷூட்டிங்கிற்கு அமெரிக்கா சென்ற மல்லிகா ஷெராவத்துக்கு இந்திய மாணவர்கள் குஜராத் வகை உணவு வழங்கினர். வெளி உணவுகளை சாப்பிடக்கூடாது என்று பட குழுவினர் தடுத்தும் அதை மீறி சாப்பிட்டார் மல்லிகா.
* சூப்பர்மேன் ஆக ஜீவா நடித்துள்ள முகமூடி 31ல் ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து ‘நீ தானே என் பொன்வசந்தம், ‘என்றென்றும் புன்னகை, ‘யான், ‘டேவிட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தொங்கிப் போன மார்புகளுடன் லின்ட்சே லோஹன்! வெளியான படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி (பட இணைப்பு)


ஷாப்பிங்குக்குப் போன லின்ட்சே லோஹன், பிரா அணியாமல் தனது தொங்கிப் போன மார்புகளுடன் வந்தது ஒரு செய்தியாகி விட்டது.
உலகம் பூராவும் ஒரே கதைதான். அவர்களுக்குப் பின்னால் கேமராக் கண்கள் சுழன்றபடியே பின் தொடரும். பிரபலங்கள் என்ன செய்தாலும், எப்படி காணப்பட்டாலும் அது செய்தியாகி விடுகிறது. இதனால்தான் நடிகர்கள், குறிப்பாக நடிகையர் பொது இடங்களுக்குப் போகும்போது ரொம்பக் கவனமாக இருப்பது வழக்கமாகியுள்ளது.
இந்த நிலையில் ஷாப்பிங் போன ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹன், பிரா அணியாத மார்புடன் வலம் வந்தது சலசலப்பாகி விட்டது. காரணம், பிரா அணியாமல் அவரது மார்புகள் கீழ் நோக்கி தொங்கிப் போய் காணப்பட்டதால்தான்.
26 வயதான லின்ட்சே, அரை டிரவுசர் மற்றும் பிரா அணியாத மேலாடையுடன் முதுகு முழுக்க திறந்த நிலையில் ஷாப்பிங்குக்குப் போயிருந்தார். அவருடன் அவரது சகோதரர் கோடியும் சென்றிருந்தார். ஒரு கடையில் டிரஸ் வாங்கினர். அப்போது கடைக்கு வந்தவர்கள் லின்ட்சேவின் உடையைப் பார்த்து வாய் பிளந்து நின்றனராம்.
காரணம், பிரா அணியாததால், லின்ட்சேவின் மார்புகள் கீழ்நோக்கி தொங்கிய நிலையில் காணப்பட்டது. மேலும் சைட் பார்வையில் மார்புகள் முழுமையாக தொங்கிக் காணப்பட்டது தெரிந்ததால் பலரும் அதையே வேடிக்கை பார்த்தனர். இதை சிலர் படம் பிடித்து வெளியிலும் விட்டு விட்டனர்.
கடைக்கு வெளியே கையில் ஒரு சிகரெட்டுடன் செல்போனில் யாருடனோ ஸ்டைலாக பேசியபடி நின்றிருந்தபோதுதான் அவரை படம் பிடித்து விட்டனர்.
லின்ட்சே தனது மார்பழகைப் பற்றி பெருமையுடன் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது… ஆனால் இப்போது எல்லோரும் பேசும்படியாகி விட்டதே லோஹன்.

நான் திரைவிமர்சனம்


எதிர்பாராமல் திகைக்க வைத்த படம்..! சிறந்த திரைக்கதை.. சிறந்த இயக்கம்.. என அனைத்தையும் தனக்குள்ளே வைத்திருக்கும் சாமான்யமான படம் இது.
தான் 24 திரைப்படங்களுக்கு இசையமைத்து சம்பாதித்த பணத்தை, இந்த ஒரே படத்தில் முதலீடு செய்த துணிச்சல்கார ஹீரோவான விஜய் ஆண்ட்டனியை நெஞ்சார வாழ்த்துகிறேன்.. அவருடைய தைரியத்துக்கு எனது சல்யூட்..! சிறந்த கதையையும், சிறந்த இயக்குநரையும் தேடிப் பிடித்திருக்கிறார் விஜய்.. அவரளவுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும், திறமையாகவும் திரையில் கனமாகக் காட்சி தந்திருக்கிறார்.
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் துவங்கும் படம், இறுதியில் மருத்துவக் கல்லூரியில் தனது உயிரை விடுகிறது.. இந்தப் படத்தை இன்னொரு கோணத்திலும், நீங்கள் பார்க்கலாம். அது மனிதனை ஆட்டி வைப்பது விதியா? அல்லது மதியா என்று.. இது அனைத்துக்கும் வரிசைக்கிரமமாக பதில் சொல்கிறது இப்படம்..!
நன்கு படிக்கும் மாணவனாக இருந்தும் நண்பர்களுக்கு உதவி செய்ய மார்க் ஷீட்டில் கையெழுத்தை போர்ஜரியாக போடப் போய் தலைமை ஆசிரியரால் கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார்.. அவமானத்தோடு வீடு திரும்பும் சிறுவன் கார்த்திக், பட்டப் பகலில் தனது தாய் வேறொருவரோடு படுக்கையில் இருப்பதைக் கண்டு வெம்புகிறான்.
தாயின் வேண்டுகோளை ஏற்காமல் தந்தையிடம் இது பற்றிக் கூற தந்தை மனமுடைந்து தூக்கில் தொங்குகிறார்.. இப்போது கேள்வி கேட்பாரே இல்லையே என்ற நிலையில் புதிய அப்பா இரவிலேயே வீட்டிற்கு வர.. கோபமடைந்த கார்த்திக், தன் அம்மாவையும், புதிய அப்பாவையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு தீ வைத்து அவர்களைக் கொல்கிறார்..!
இதுவரையில் நடந்தவைகள் அனைத்தும் விதியின் விளையாட்டு.. அந்தச் சிறுவனுக்கு எது உண்மை..? எது பொய்..? எது நிஜம்..? எது மாயை என்பது தெரியாத வயது.. அம்மா அப்பாவிடம் தைரியமாகச் சொல்கிறாள்.. “ஆமா.. அப்படித்தான்.. அவன்தான் வந்தான்.. நீ வேஸ்ட்டு.. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ..” என்கிறாள். இதை புரிந்து கொள்ளும் வயது அவனுக்கில்லை.. விதிவிட்ட வலியை ஏற்றுக் கொள்கிறான்.
சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி அவனை அரவணைக்கிறது.. அனைத்தையும் அங்கே கற்றுக் கொள்கிறான்.. 21 வயது முடியும்வரையிலான அவனது தண்டனைக் காலம் முடிந்து இந்த போலி, பொல்லா உலகத்திற்குள் கால் வைக்கிறான்.. இதுவரையிலும் ஓரமாய் அமைதியாய் இருந்த விதி தனது விளையாட்டை அவனது வாழ்க்கையில் மீண்டும் துவக்குகிறது..!
சொந்த சித்தப்பா வீட்டிற்கு வந்த அவனுக்கு, “அவன் துணைக்கு ஏன் நீயும் வெளில போயேன்..” என்று சித்தப்பாவுக்கு சித்தியிடமிருந்து கிடைத்த மரியாதையைக் கண்டு, சொல்லாமல் கொள்ளாமல் தேநீரைக்கூட குடிக்காமல் வெளியேறுகிறான். விதியின் துவக்கம் இது..!
விதியின் பின்தொடரல் தெரியாமலேயே இராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பும் பஸ்ஸில் ஏறி அமர்கிறான் கார்த்திக். அருகில் ஒரு முஸ்லீம் இளைஞன். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க சென்னைக்கு செல்கிறான்.. ஓரமாய் அமர்ந்திருந்த கார்த்திக்கை அந்த சீட்டுதான் வேணுமா என்று கேட்க வைக்கிறது விதி.. அது புரியாமல் டீஸன்சியை காட்ட விரும்பி நகர்ந்து இடம் தருகிறான் கார்த்திக். நடுவழியில் ஆர்ப்பரிக்கிறது விதி..
பஸ் விபத்துக்குள்ளாகி கார்த்திக்கின் அருகில் இருந்த முஸ்லீம் நண்பன் ஸ்தலத்திலேயே மரணிக்கிறான். விதி கோடு போட்டுக் கொடுத்தால், அவனவன் மதி தானே ரோடு போட்டுக் கொள்ளும். இப்படித்தான் துவங்குகிறது விதி-மதி விளையாட்டு..
இப்போது கார்த்திக் மதியின் சகுனி விளையாட்டு துவக்கம். இறந்து போன இளைஞன் கொண்டு வந்த சூட்கேஸ்களை நொடியில் தூக்கிக் கொண்டு தனது அம்மா, அப்பாவுடன் இருந்த போட்டோவை தனது பையில் இருந்து எடுத்துக் கொண்டும் வழியும் ரத்தத்த்தோடு தானே சாலைக்கு ஓடி தப்பிக்கிறான் கார்த்திக்.
சென்னையில் மேன்ஷனில் ஒரு அறையை அவசரமாக வாடகைக்கு எடுத்து பரபரப்பாக சூட்கேஸை துழாவ முகமது சலீம் என்ற அந்த இளைஞனின் எம்.பி.பி.எஸ். ஆர்வம் கார்த்திக்கிற்கு புரிகிறது. கூடுதலாக அவன் எதிர்பார்த்த பணமும் கிடைக்கிறது.
குளித்துவிட்டு வருவதற்குள் அதே அறையில் தங்கியிருந்த இன்னொரு முஸ்லீம் நண்பர் அந்த பைலை கையில் வைத்துக் கொண்டு விதி, நாக்கில் வகுத்துக் கொடுத்த வார்த்தைகளை வீசுகிறார். “நல்ல மார்க் சலீம். டாக்டராகப் போறீங்க.” – விதி எடுத்துக் கொடுக்க கார்த்திக்கின் மதி பரபரப்பாகிறது..!
உடனுக்குடன் மேன்ஷன் மாற்றம்.. அந்த சலீமின் இடத்துக்கு தான் போக விரும்பி அனைத்தையும் ஒரு பாடலுக்குள்ளேயே செய்து முடிக்கிறான் கார்த்திக். மகாபலிபுர கடற்கரையில் ராட்டினத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து கையில் காசைத் திணித்து தனது அப்பாவாக ஒரு நாள் நடிக்க அழைத்துப் போய் கடைசியில் கல்லூரியில் தனக்கான சீட்டையும் பெற்று விடுகிறான்.. மதி கரவொலி எழுப்பி சிரிக்க விதி மெளனமாக காய் நகர்த்துகிறது.. இப்போது அதன் கையில் ஆட்டம்..
அசோக் என்ற ஸ்டூடண்டுடன் கை கோர்க்கிறது விதி. ஒரு சந்தர்ப்பத்தில் அசோக்கை கார்த்திக் என்ற சலீமுடன் கோர்த்துவிடுகிறது.. இப்போது மதி விழித்துக் கொண்டு கிடைத்த புளியங்கொம்பை கைவிடக் கூடாது என்பதற்காக அதன் வசதிகளை அனுபவிக்க முடிவெடுக்கிறது..!
மேன்ஷனுக்கு வாடகை கொடுக்க காசில்லாமல், காபி டேயில் பகுதி நேர வேலை பார்த்தும் சமாளிக்க முடியாது.. இனிமேல் அசோக்கின் பங்களா வீட்டிலேயே தங்கி இருக்கிறவரைக்கும் இருப்போம் என்று மதி சொல்ல அபாரமாக ஒத்துழைக்கிறார் சலீம்..
அசோக்கின் சகா இரவில் வாந்தி எடுத்த்தை சுத்தம் செய்து வைத்து, முந்தின இரவில் கூத்தாடிகளின் கொண்டாட்டத்தில் பப் போன்று இருந்த வீட்டை சுத்தமாக்கி வைத்து அசோக்கிடம் நெருங்குகிறான் சலீம். ஆனாலும் விதி சலீமுக்கு இங்கேயும் ஒரு செக்கை வைத்திருக்கிறது சுரேஷ் என்ற நண்பனின் மூலமாக.. பார்த்தவுடன் பிடிக்காதவர்கள் பட்டியில் சலீமை சேர்த்து வைத்திருக்கிறான் சுரேஷ்.
விதியின் விளையாட்டு கொஞ்சம் இடைவேளைவிட்டு தான் ஆட்டுவிக்கப் போகும் கதாபாத்திரங்களின் தன்மை முழுவதையும் நமக்குச் சொல்லிவிட்டு மீண்டும் தனது ஆட்டத்தைத் துவக்குகிறது..! இப்போது அடுத்தக் கட்டம் வீட்டிற்கு வெளியே சலீமை துரத்துகிறது.
சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியின் தலைமைக் காப்பாளர், சலீமை கார்த்திக்காக நினைத்து பேச இதனை அசோக்கும் கேட்க வேண்டியதாகிறது.. சலீம் தனது மதியினால் முடிந்த அளவுக்கு சமாளித்து வைக்கிறான்..
பாண்டிச்சேரிக்கு குட்டிகளுடன் அசோக்கையும் தள்ளிக் கொண்டு போக நினைக்கிறது விதி.. சுரேஷின் பாராமுகத்தை உணர்ந்து தான் வரவில்லை என்று சொல்ல வைக்கிறது சலீமின் மதி. அசோக்கின் காதலி ரூபா வீடு தேடி வந்து அசோக் பற்றிக் கேட்டதை மறைக்கச் சொல்கிறது விதி. மறைத்ததை வெளியிலும் சொல்ல வைக்கிறது.. ஆனால் மதியோ சலீமின் கன்னத்தில் விழுந்த அறையைக்கூட தாங்கிக் கொள்ளச் சொல்கிறது.
சலீமை அசோக்கின் வீட்டில் இருந்து துரத்தச் சொல்கிறது விதி. சலீம் செல்லலாம் என்று முடிவெடுத்த நேரத்தில் அவனது பாதுகாப்பு உணர்வை அசோக்கிடம் காட்டிக் கொடுக்கிறது விதி. சலீம் குளிக்கப் போன நேரத்தில் அவனது அறைக்குள் நுழைந்து தாய், தந்தையுடனும் விபூதி பூசிய நிலையில் இருக்கும் புகைப்படத்தைக் காண வைக்கிறது விதி.. அடுத்தது அராஜகம்தான்..
சாதாரண மனிதனால் அவதூறைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அவமானத்தை தாங்க முடியாதுதான்.. விதி எப்படியெல்லாம் கோரமாக விளையாடுகிறது? தனது சிப்பாய்களையெல்லாம் இழந்துவிட்டுத் தவிக்கிறான் சலீம். கை கலப்பில் அசோக்கை பரமபதம் சென்றடைய வைக்கிறது விதி..
ஏற்கெனவே இருந்த சிறைக் காலம் போதாதா..? மீண்டும் சிறைக்கா..? இப்போது அசுர வேகத்தில் யோசிக்கிறது சலீமின் மதி.. அசோக்கை பார்சல் கட்டி கொண்டு போய் ஓரிடத்தில் புதைத்துவிட்டு வந்து ஆற, அமர யோசித்து விதிக்கு எதிரான தனது ஆட்டத்தை அசுர வேகத்தில் துவக்குகிறான் சலீம்..!
சலீம் உயிருடன் இருப்பது போல் அவனது அப்பாவிடம் போனில் பேசுகிறான் சலீம். அவரும் நம்புகிறார். அசோக்கை அவரது நண்பர் ஒருவரை உடனே போய் பார்க்கச் சொல்லும்படி சொல்கிறார். ரூபாவை வீட்டு வாசலுக்கே அழைத்து வருகிறது விதி. கன நொடியில் விதியை புரிந்து கொண்டு பெப்பே காட்டுகிறது சலீமின் மதி.
மாடி பெட்ரூமில் அசோக் இருப்பதாகக் காட்டி தானே வீட்டைச் சுற்றி மாடிக்குப் போய் கதவுக்கு அந்தப் புறமாக இருந்து கொண்டு அசோக் போல் வாய்ஸ் மாடுலேஷன் பேசி ரூபாவை நம்ப வைத்து அனுப்பி வைக்கிறான்..! அசோக் அப்பாவின் நண்பரை தான்தான் அசோக் என்று பொய் சொல்லிச் சந்திக்கப் போகுமிடத்தில் விதியின் விளையாட்டு மீண்டும் ரூபாவை அங்கே அழைத்து வருகிறது. அதைவிட சுவாரஸ்யம்.. ரூபாவும், அந்த நண்பரின் மகள் ப்ரியாவும் நண்பர்கள்.. அசோக்கிற்காக அவர்கள் காத்திருக்க.. தப்பிக்க நினைத்து தனது சாகசங்கள் அனைத்தையும் செய்கிறது மதி. இப்போதும் தப்பிக்கிறான் சலீம்.. இனி விதியை நாம் முந்திக் கொள்வோம் என்று நினைத்து ஆட்டத்தை கலைத்துப் போடுகிறது சலீமின் மதி.
இரவு விடுதிக்கு சுரேஷையும், ரூபாவையும் வரவழைத்து.. அதே இடத்திற்கு ரூபாவின் நண்பி ப்ரியாவையும் வரவழைத்து ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கிறான் சலீம். சுரேஷை வெறுப்பேற்றுவது.. இனி அசோக்கின் மனதில் ரூபாவுக்கு இடமில்லை. புதிதாக வந்த ப்ரியாவுக்கு அந்த இடம் என்பதைச் சொல்லி அவளை அப்புறப்படுத்துவது.. ப்ரியாவை தனக்காக தயார் செய்வது என மூன்றையும் கில்லியாய் அடிக்கிறான் சலீம்..
ஆனால் மறுநாளே ப்ரியாவை வீட்டிற்கு அழைக்கிறது விதி.. அவளுடன் டின்னர் சாப்பிடலாம் என்று நினைத்து வெளியேற நினைத்த அசோக்கை சுரேஷையும் அழைத்து வந்து கோர்த்துவிடுகிறது விதி.. தானா வந்து மாட்டுறானே என்ற விதியின் கோரம் மதியை குணமிழக்கச் செய்ய கொஞ்சம், கொஞ்சமாக விதியின் வசமாகிறான் சலீம். ப்ரியாவை வெளியேறச் சொல்லிவிட்டு சுரேஷையும் போட்டுத் தள்ளி விடுகிறான்..
இப்போது சலீம் மீண்டும் மதியின் வசம்.. தான் தப்பிக்க வேண்டும். அதே சமயம் அசோக்கை தேட வேண்டும்.. என்ன செய்யலாம்..? வேண்டுமென்றே அரைகுறையாக அசோக்கை புதைத்துவைத்துவிட்டு வந்துவிடுகிறான்.. விதி வழக்கமான பாணியில் போலீஸை வீட்டுக்கு இழுத்து வருகிறது..!
மதியின் துணையால் தனது சுவாரஸ்யமான திரைக்கதை அவிழ்த்து விடுகிறான் சலீம். அசோக்கிற்கும், சுரேஷிற்கும் இடையில் ஏற்கெனவே மனத்தாங்கல். இதற்கு ரூபாவே சாட்சி என்று ரூபா பக்கம் கேஸை தள்ளிவிடுகிறான். அடுத்த நாள் போலீஸ் ஸ்டேஷனில் மீண்டும் ஒரு பல்டியடித்து ப்ரியாவையும் கோர்த்துவிடுகிறான். ப்ரியா வரும்போது விதி விளையாடி, சலீமை, அசோக் என்று காட்டிக் கொடுத்துவிடுமோ என்று நினைக்க.. விதி இங்கேதான் சோம்பேறித்தனப்பட்டுவிட்டது. திரும்பிப் பார்க்க எத்தனையோ வாய்ப்பிருந்தும்.. இருவரையும் அருகருகே வைத்து விசாரிக்க வைக்கும் சூழல் இருந்தும், விதி அதைச் செய்யாமல்விட.. மதி கை கொட்டி எகத்தாளமாகச் சிரிக்கிறது..!
ரூபாவிடம் அசோக்கின் போனில் இருந்து அசோக்கின் குரலில் பேசும் சலீம், தான் சுரேஷை கொலை செய்துவிட்டதாகச் சொல்கிறான். தான் சாகப் போவதாகவும் சொல்கிறான். பதற்றத்துடன் வீட்டுக்கு வரும் ரூபாவை எதிர்கொள்கிறான் சலீம்.
தான் வரும்போது இந்தக் கடிதம் மட்டுமே இருந்ததாகச் சொல்லி ஒரு கடித்த்தை நீட்டுகிறான். அதில் தான் சுரேஷை கொலை செய்த்தை பகிரங்கமாக தனது கைப்பட எழுதியிருக்கிறான் அசோக். குழப்பத்தில் இருக்கும் ரூபாவுக்கு விதி திடீரென்று ஒன்றை ஞாபகப்படுத்தி உசுப்பிவிடுகிறது.
அன்றொரு நாள் தன்னைச் சமாதானப்படுத்த அசோக்கின் குரலில் சலீம் பேசியது அவளுக்கு நியாபகம் வர.. “நீ அசோக் வாய்ஸ்ல பேசுவீல்ல..” என்கிறாள்..! நொடியில் சலீமின் மதி 1 லட்சம் எலெக்ட்ரான் ஸ்பீடில் செல்கிறது.. “யாரோ வெளில இருக்காங்க. அநேகமா அது அசோக்காகூட இருக்கலாம். நீ இந்த ரூமுக்குள்ள இரு.. நான் இப்ப வந்தர்றேன்..” என்று சொல்லி ரூபாவை அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டி சாவியை மட்டும் அங்கேயே தொங்க விடுகிறான். அடுத்து தனது அதகளத்தைத் துவக்குகிறான் சலீம்.
நிச்சயமாக அது ருத்ர தாண்டவம்தான்.. மோனோ ஆக்ட்டிங்கில் பின்னியெடுக்கிறான் சலீம். அவனது மதியின் அற்புதமான விளையாட்டு இது..! வெளியில் அசோக்கும், தானும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சீன்ஸை சப்தத்தின் மூலமாக சலீம் ஏற்படுத்த.. உள்ளேயிருக்கும் ரூபா நம்பி விடுகிறாள்.. வீடே அலங்கோலமாகி.. தானே ஏற்படுத்திக் கொண்ட காயத்துடன் இருக்கும் சலீமை அந்தக் கோலத்தில் பார்க்கிறான் அப்போது அங்கே வரும் கல்லூரி நண்பன். அவன் போட்ட கூச்சலில் அக்கம்பக்கம் திரண்டு வர.. ரூபா மீட்கப்பட.. போலீஸும் வருகிறது..!
இப்போது விதி கொஞ்சம் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க.. சலீமின் அப்பாவும், அம்மாவும் வரவழைக்கப்படுகிறார்கள். சுரேஷை கொலை செய்துவிட்டு, இப்போது சலீமையும தாக்கிவிட்டு அசோக் தப்பியோட்டம்..! இதுதான் சலீமின் மதி செய்த திரைக்கதை..
தினம்தோறும் கள்ளக் கண்களையே பார்த்து சலித்துப் போயிருந்த இன்ஸ்பெக்டருக்கு நொடிக்கு ஒரு தரம் உளவு பார்க்க அலையும் சலீமின் கண்கள் ஏனோ சந்தேகத்தைக் கிளப்ப.. சலீமின் பூர்விகத்தைத் தோண்டியெடுக்க ஒரு ஆர்டரை இராமநாதபுரத்திற்கு அனுப்ப வைக்கிறது விதி..!
இராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் டேபிளில் இருக்கும் அந்த பேக்ஸ் மிஷின் துப்பிய அந்த பேக்ஸ் செய்தியைவிடவும் ராக்கெட் ஸ்பீடில் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கும் சலீம் இராமநாதபுரத்துக்கு தாவுகிறான். இறந்து போன ஒரிஜினல் சலீமின் வீட்டில் எதிர்வரும் போலீஸ் விசாரணைக்குக் காத்திருக்கிறான் கார்த்திக்.
வந்த போலீஸுக்கு சலீம் தந்தையின் இன்றைய பாரிச வாயு அட்டாக் உடலும், அதனை தூக்கிச் சுமக்கும் சலீமின் கடமையும் விரட்டியடிக்க.. நல்ல பையன் சர்டிபிகேட் சென்னைக்குச் செல்ல.. விதி மேற்கொண்டு இக்கதையில் எப்படி இவனை மாட்டி வைப்பது என்று தெரியாமல் இப்போது இராமநாதபுரத்திலேயே நின்று கொள்கிறது.
இனிமேல் உங்களுக்காகத்தான் நான் வாழப் போறேன் என்ற ஒரு சின்ன நம்பிக்கை ஒளிக் கீற்றை அந்தப் பெரியவரிடம் சொல்லிவிட்டு, அதே மருத்துவக் கல்லூரியில் சலோ போட்டு செல்கிறான் சலீம் என்ற கார்த்திக்..!
இறுதியில் தப்பை தப்பா செஞ்சால்தான் தப்பு.. தப்பை சரியாச் செஞ்சு தப்பித்துக் கொண்டால், அதில் தப்பில்லை என்ற விதிக்கு மாற்றான ஒரு விதியை நமக்கே சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!
அருமையான இயக்கம்..! மிக இறுக்கமானது..! முதல் படம் போலவே இல்லை விஜய் ஆண்ட்டனிக்கு.. என்ன முகம் மட்டுமே 21 வயதுக்கு ஒத்துவரவில்லை என்றாலும், அவரது இறுகிப் போன முகம்.. களையிழந்த பொலிவு.. எப்போதும் சோகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது என்று இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்ற தோரணை..! அசோக்கின் கொலை காட்சியிலும், தன்னை அசோக் அடிப்பதாக நினைத்து செய்யும் மோனோ ஆக்ட்டிங்கிலும் மனிதர் பின்னியெடுத்திருக்கிறார்..! வெல்டன் விஜய் ஸார்..!
அசோக்காக நடித்திருக்கும் சித்தார்த்தும் விஜய்க்கு ஈடு கொடுத்திருக்கிறார்.. ‘மக்காயாலா’ பாடல் காட்சியில் ஒரே ஒரு பிரேமில் இவரது எக்ஸ்பிரஷன் ஹீரோவே இவர்தானா என்று சொல்ல வைக்கிறது..! ரூபாவை சமாளிக்க முடியாமல், விஜய்யை கண்டிப்பது.. விஜய்யை சந்தேகித்து அதனை குரூரமாக தீர்த்துக் கொள்வது என்ற இவரது ஸ்டைல் புதிய வில்லனை அறிமுகப்படுத்தியிருக்கிறது..!
விபா, ரூபா மஞ்சரி, அனுயான்னு ஒண்ணுக்கு மூணு ஹீரோயின்கள்.. விபா புதிய அழகு.. பேச்சு ரசிக்க வைக்கிறது..! கல்லூரியோடு இவரது ஆட்டம் முடிந்துவிடுவதால் பெரிதாக ஏதுமில்லை.. ரூபா மஞ்சரிதான் கடைசிவரையில் துணைக்கு வருகிறார். முன்பைவிட இப்போது கொஞ்சம் கூடுதல் அழகோடு இருக்கிறார் ரூபா.. அதிலும் மக்காயாலா பாடல் காட்சியில் செம க்யூட்.. இவருக்கு நடிக்கவும் தெரியும் என்பதைத்தான் இறுதிக் காட்சியில் காண முடிகிறது.. அனுயாவுக்கு கெஸ்ட் ரோல்தான்.. அவரவர்களின் சொந்த கேரக்டர்களை போன்ற வசனங்களும், காட்சியமைப்புகளும் இருப்பதால் மூவருமே இயல்பாக நடித்திருப்பது போல் தோன்றுகிறது..!
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவரை நிறைய ஹிந்தி படங்களில் பார்த்திருக்கிறேன்.. தமிழ் நடிகர்களை ஏனோ முயற்சி செய்ய முயலாமல் இவரை கொண்டு வந்ததற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. பெரிதாக இவரது கேரக்டர் எதையும் சொல்லிவிடவில்லை..
அடுத்தவர் படம் என்றாலே கொஞ்சம் பார்த்து மியூஸிக் செய்பவர்கள் தனது சொந்தப் படம் என்றால் ச்சும்மா விடுவார்களா..? சந்தேகமே இல்லாமல் ‘மக்காயாலா’ சூப்பர் ஹிட்.. தப்பெல்லாம் தப்பே இல்லை பாடல் இனி தப்பு செய்பவர்களுக்கு தேசிய கீதமாகலாம்.. இதனை எழுதிய வலையுலக நண்பர் அஸ்வினுக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..!
பாடலையும்விட இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் காட்சிகளுக்கேற்ற பின்னணி இசையை நறுக்கென்று கொடுத்து பிரேம் பை பிரேம் டென்ஷனை கூட்டியிருக்கிறார் விஜய் ஆண்ட்டனி..! நீலன் கே.சேகரின் சிக்கலான முறுகல் கதையை, ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜீவா சங்கர். மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர். இதனாலேயே ஜீவா என்ற பெயரை தனது சொந்தப் பெயருக்கு முன்பே சூட்டிக் கொண்டாராம்.. முதல் அறிமுகத்தையே அசத்தலாக செய்திருக்கிறார்.
தனது சொந்தக் கதையை மட்டுமே எடுப்பேன் என்றில்லாமல் வெற்றிக் கதையை தான் இயக்க வேண்டும் என்று நினைத்த இவரது நினைப்புக்கு பாராட்டுக்கள்.. இயக்கத்திற்கு அடுத்து இவரது ஒளிப்பதிவு இவரது குருநாதருக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகவே உள்ளது. இடைவேளைக்கு பின்னான பல காட்சிகள் இருட்டிலேயே எடுக்கப்பட்டிருப்பதும், அதற்கான லைட்டிங்ஸ் இருக்கா, இல்லையா என்றுகூட தெரியாத அளவுக்கு எடுக்கப்பட்டிருப்பது இவரது சிறப்புதான்..! ஜீவா பெயர் காப்பாற்றப்பட்டது என்றே சொல்லலாம்..!
முதல் காட்சியில் துவங்கி, இறுதிவரையிலும் இவரது இயக்கம் தொடர்ச்சியான ஒரு பிரமிப்பைத் தருகிறது.. இதற்கு இன்னொரு துணை எடிட்டர் ஏசு சூர்யாவின் கச்சிதமாக கட்டிங்.. சண்டைக்கு வரும் இளைஞனை ஸ்கூரூ டிரைவரை வைத்து மிரட்டும் காட்சியிலும், ஒரே காட்சியில் இரண்டு பேரை துரத்தியடிக்கும்வகையில் எழுதப்பட்ட திரைக்கதைக்காக டாஸ்மாக் பாரில் கிருஷ்ணமூர்த்தி தலையில் பாட்டிலை உடைக்கும் காட்சியிலும், அசோக் கொல்லப்பட்ட இடைவெளியில் அடுத்தடுத்த காட்சிகளை நறுக்கென்று கொண்டு போய் முடித்திருப்பதும் அது கொலை என்பதாகவே நமக்குத் தெரியவில்லை. தெரியாமல் நடந்துவிட்டதாகவே நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.. வெல்டன் எடிட்டர் ஸார்..
இடையிடையே வந்த சில லாஜிக் மீறல்களை மட்டும் நாம் கண்டு கொள்ளாமல் போனால், நல்லதொரு திரில்லர்வகை படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்..! எல்லா ஆட்டத்தையும் ஆட வைத்துவிட்டு கிளைமாக்ஸில் இவர் எழுதியிருக்கும் வசனங்களும், காட்சியமைப்பும் கார்த்திக் சலீமாக செய்த தப்பு தப்பில்லையோ என்று நினைக்கும் அளவுக்கு நம்மை நெகிழ வைக்கிறது. இயக்குநர் இங்கேதான் நமக்கு விதி-மதி சோதனையின் முடிவைக் காண்பித்திருக்கிறார்.
விதியினால் விளைந்ததை மதி எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதற்கு இந்தப் படத்தின் கிளைமாக்ஸும் ஒரு உதாரணம்..! மெளனகுரு, வழக்கு எண், ராட்டினம் போன்ற படங்களுக்கு பின்பு கிளைமாக்ஸில் நம்மை அசரடித்திருப்பது இந்தப் படம்தான்.. நல்லவேளையாக யூ/ஏ சர்டிபிகேட் வாங்கியதால் படம் கொஞ்சமாவது தப்பித்தது.. உண்மையில் இப்படம் ஏ சர்டிபிகேட்டிற்கு மட்டுமே உரித்தானது.. எப்படி தப்பித்தார்கள் என்று தெரியவில்லை. பாராட்டுக்கள்..! சினிமா ரசிகர்களால் இப்படம் நிச்சயம் கொண்டாடப்படும் என்றே நினைக்கிறேன்..! அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..! காணத் தவறாதீர்கள்..!!!